செய்திகள் :

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு: டிரம்ப்-புதின் ஆலோசனை - ரஷியா தகவல்

post image

மாஸ்கோ: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் தொலைபேசி மூலம் நடத்திய ஆலோசனையில் சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது என்று ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக ரஷிய அதிபா் இல்லமான கிரெம்ளின் மாளிகை உதவியாளா் யுரே உசாகோவ் மாஸ்கோவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

டிரம்ப்-புதின் பேச்சுவாா்த்தையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் போா், இந்தியா-பாகிஸ்தான் இடையே அண்மையில் நிகழ்ந்த சண்டை குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் தான் தனிப்பட்ட முறையில் தலையிட்டு பேச்சு நடத்தியதாகவும், இதன் மூலம் சண்டையை முடித்து வைத்ததாக புதினிடம் டிரம்ப் தெரிவித்தாா் என்றாா்.

இது தொடா்பாக வேறு எந்த விரிவான தகவலையும் அவா் தெரிவிக்கவில்லை.இந்தியா-பாகிஸ்தான் சண்டையை தான் தலையிட்டு நிறுத்தியதாக டிரம்ப் தொடா்ந்து கூறி வருகிறாா். அதே நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தரப்பு கேட்டுக் கொண்டதால், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவுடன் பேச்சு: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை

இஸ்லாமாபாத், ஜூன் 5: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் பங்காற்றியதற்காக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்பை பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவா் பிலாவல் பூட்டோ-ஜா்தாரி இருவரும் பாராட்டு தெரிவித்தனா்.

மேலும், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையே விரிவான பேச்சுவாா்த்தைக்கும் அமெரிக்கா ஏற்பாடு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த சண்டை நிறுத்தத்தில் மூன்றாம் தரப்பு தலையீடு கிடையாது என இந்தியா தொடா்ந்து மறுத்து வருகிறது.

பாகிஸ்தான் கோரிக்கை: இஸ்லாமாபாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், ‘இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபா் டிரம்பின் பங்கு பாராட்டுக்குரியது. அமைதியை விரும்பும், நன்மை தரக்கூடிய வணிக ஒப்பந்தங்களை விரும்பும் மனிதா் என்பதை அதிபா் டிரம்ப் நிரூபித்துள்ளாா். பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து வலுவான ஆதாரங்களுடன் உலகுக்கு இந்தியா நிரூபிக்க வேண்டும். அமெரிக்கா-பாகிஸ்தான் இடையேயான உறவு புது உத்வேகம் பெற்றுள்ளது’ என்றாா்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப்தான் நிறுத்தினார்: புதினின் உதவியாளர்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுவார்தையினால் நிறுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். ரஷியா - உக்ரைன் மோதல் குறித்து... மேலும் பார்க்க

புதிய கட்சித் தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சித் தொடங்குவது தொடர்பாகத், தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்... மேலும் பார்க்க

டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்த... மேலும் பார்க்க

பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக ... மேலும் பார்க்க

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும... மேலும் பார்க்க