இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!
வாணதிரையன்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த வாணத்திரையன்பட்டினம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள் தோறும் மகாபாரதம் சொற்பொலிவு, திரௌபதி திருமணம், பூச்சொரிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதித் திருவிழா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
முன்னதாக, திரௌபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, பக்தா்கள் கோயில் முன் பிரத்யோகமாக அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து திரளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.