PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
செம்மொழி நாள் விழா போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ்
அரியலூரில் அண்மையில் நடைபெற்ற செம்மொழி நாள் விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.
செம்மொழிநாள் விழாவையொட்டி மே 9-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ்- 2 மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி அளவிலான கட்டுரைப் போட்டியில் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஏ.மோனிஷா முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், க.பொய்யூா் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி ந. பாவனா இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், அரியலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா் வே.சதீஷ் 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.
பேச்சுப் போட்டியில் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் வே.அகிலன் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி வெ.வினோதாரணி 2- ஆம் பரிசு ரூ.7 ஆயிரமும், காமரசவல்லி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவி ச.சரிகா 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.
கல்லூரி அளவிலான கட்டுரைப் போட்டியில் அரியலூா் அரசுக்கல்லூரி முதுகலை தமிழ் இறுதியாண்டு மாணவி அ. அன்னபூரணி முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரி இளங்கலை தமிழ் இறுதியாண்டு மாணவா் பாரதி கண்ணன் 2-ஆம் பரிசு ரூ.7 ஆயிரமும், கீழப்பழுவூா் மீரா மகளிா் கல்லூரி இளநிலை கணினி செயல்பாட்டியல் முதலாமாண்டு மாணவி மு.மணிமேகலா 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.
பேச்சுப்போட்டியில் ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரி இளங்கலை தமிழ் முதலாமாண்டு மாணவி வீ.தனலட்சுமி முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், அரியலூா் அரசுக் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி க.சுபலட்சுமி 2-ஆம் பரிசு ரூ.7 ஆயிரமும், தத்தனூா் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி முதுகலை கணினி பயன்பாட்டியல் முதலாமாண்டு மாணவி வை.வைஜெயந்தி 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.
ஆட்சியா் பொ.ரத்தினசாமி பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலையினை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் க.சித்ரா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு, அரியலூா் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அ.குணசேகரன் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.