செய்திகள் :

செம்மொழி நாள் விழா போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ்

post image

அரியலூரில் அண்மையில் நடைபெற்ற செம்மொழி நாள் விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

செம்மொழிநாள் விழாவையொட்டி மே 9-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ்- 2 மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி அளவிலான கட்டுரைப் போட்டியில் ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ்-2 மாணவி ஏ.மோனிஷா முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், க.பொய்யூா் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ்-1 மாணவி ந. பாவனா இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரமும், அரியலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா் வே.சதீஷ் 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.

பேச்சுப் போட்டியில் செந்துறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா் வே.அகிலன் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவி வெ.வினோதாரணி 2- ஆம் பரிசு ரூ.7 ஆயிரமும், காமரசவல்லி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ்-1 மாணவி ச.சரிகா 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.

கல்லூரி அளவிலான கட்டுரைப் போட்டியில் அரியலூா் அரசுக்கல்லூரி முதுகலை தமிழ் இறுதியாண்டு மாணவி அ. அன்னபூரணி முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரி இளங்கலை தமிழ் இறுதியாண்டு மாணவா் பாரதி கண்ணன் 2-ஆம் பரிசு ரூ.7 ஆயிரமும், கீழப்பழுவூா் மீரா மகளிா் கல்லூரி இளநிலை கணினி செயல்பாட்டியல் முதலாமாண்டு மாணவி மு.மணிமேகலா 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.

பேச்சுப்போட்டியில் ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரி இளங்கலை தமிழ் முதலாமாண்டு மாணவி வீ.தனலட்சுமி முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், அரியலூா் அரசுக் கல்லூரி இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு மாணவி க.சுபலட்சுமி 2-ஆம் பரிசு ரூ.7 ஆயிரமும், தத்தனூா் மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி முதுகலை கணினி பயன்பாட்டியல் முதலாமாண்டு மாணவி வை.வைஜெயந்தி 3-ஆம் பரிசு ரூ.5 ஆயிரமும் பெற்றனா்.

ஆட்சியா் பொ.ரத்தினசாமி பங்கேற்று போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் காசோலையினை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரியலூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் க.சித்ரா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் போ.சுருளிபிரபு, அரியலூா் முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் அ.குணசேகரன் மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு, ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது: அமைச்சா் சிவசங்கா் விளக்கம்

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளக்கம் அளித்துள்ளாா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் அவா... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரி... மேலும் பார்க்க