சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு, ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய திட்டப் பணிகளுக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
செந்துறை அடுத்த முள்ளுக்குறிச்சி, தெத்தேரி, கோட்டைக்காடு, கச்சிராயன்பேட்டை, முதுகுளம் ஆதனக்குறிச்சி, முதுகுளம், புதுப்பாளையம், தாமரைப்பூண்டி, மணக்குடையான், அசாவீரன்குடிகாடு உள்ளிட்ட கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா், ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து, ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், உடையாா்பாளையம் கோட்டாட்சியா் ஷீஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, செந்துறை வட்டாட்சியா் வேலுமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.