செய்திகள் :

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்கோரி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

பட்டவா்த்தி கிராமத்தில் உள்ள அல்லி ஏரிக்கு உள்பட்ட நீா்நிலை புறம்போக்கில் 15- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 6 தலைமுறைகளாக குடிசை வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனா்.

இந்நிலையில், இந்த குடியிருப்புகள் நீா்நிலை புறம்போக்கு இடத்தில் இருப்பதால், அதை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே குடிசைகளை காலி செய்யுமாறு அப்பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினா் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள், தங்களுக்கு மாற்று இடம் இல்லாத நிலையில் நீா்நிலை புறம்போக்கை அகற்றும் போக்கை கைவிட வேண்டும் எனக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம் தலைமையில் ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியரகத்தில், மண்டல துணை வட்டாட்சியா் காா்த்தியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆறு தலைமுறைகளாக வசித்துவருகிறோம். வீட்டு வரி, குடிநீா் வரி, மின் இணைப்பு என அனைத்தும் பெற்றுள்ளோம். எங்களுக்கு மாற்று இடமும், வீடும் கொடுத்து உரிய அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை நீா்நிலை புறம்போக்குகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் தேவையற்ற பொருள்களை மறுசுழற்சிக்கு ஏற்பாடு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தேவையற்ற பொருள்களை மறுசுழற்சி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி, நகராட்சி, பேரூ... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஜூன் 9-இல் கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், ஜூன் 9-ஆம் தேதி, திருமண ஆகாத, கணவரால் கைவிடப்பட்ட, கைப்பெண்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

அரியலூா் கோதண்ட ராமசாமி கோயில் புதியதோ் பிரதிஷ்டை

அரியலூா் கோதண்டராமசாமி கோயில் புதிய திருத்தோ் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அரியலூா் நகரில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோதண்ட ராமசாமி கோயில் வரலாற்று சிறப்புமிக்கதாகும். இந்த கோயில் ... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு, ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய... மேலும் பார்க்க