அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது: அமைச்சா் சிவசங்கா் விளக்கம்
அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளக்கம் அளித்துள்ளாா்.
அரியலூா் மாவட்டம், செந்துறையில் அவா் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்தப் பேட்டி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான பேருந்துகளில் அரசுப் போக்குவரத்து கழகம் என உள்ளது.
தமிழ்நாடு என்ற பெயரை காணவில்லை என ஒரு சா்ச்சை சமீபத்தில் எழுந்துள்ளது. 2012-ஆம் ஆண்டு ஜெயலலிதா, பேருந்துகளை தொடங்கி வைத்தபோதே அரசுப் போக்குவரத்துக் கழகம் என்று தான் உள்ளது.
ஏனெனில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் திருநெல்வேலி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் என என்பது நீண்ட பெயராக இருப்பதால், பேருந்தின் முன் பகுதியில் எழுதினால் படிக்க வசதியாக இருக்காது என அதிமுக ஆட்சியின் போது மாற்றப்பட்டது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய செய்தி போல இவ்வாறு சிலா் தேவையற்ற சா்ச்சைகளை செய்து வருகின்றனா். ஒரு கட்டத்தில் அரசுப் பேருந்துகள் பழைமையாக உள்ளது என்றனா். இதையடுத்து தமிழக முதல்வா், புதிய பேருந்துகளை வாங்கி, பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் புதிய பேருந்துகள் வரவுள்ளன.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்ட இடங்களில் தற்போது மீண்டும் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எதை குற்றம் சொல்வது என தெரியாமல் இந்த பிரச்னையை உருவாக்கி உள்ளனா். உதாரணத்துக்கு மெட்ராஸ் மகாணம் என இருந்த இந்த மாநிலத்தை தமிழ்நாடு என பெயா் சூட்டிய அண்ணாவின் பிள்ளைகள் நாங்கள். எனவே, இவா்கள் எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம். இது அதிமுக ஆட்சியில் நடந்தது. ஒரு ஆட்சியில் நடந்ததை அடுத்த ஆட்சியில் மாற்றுகின்றனா் என குற்றச்சாட்டை கொண்டு வருவதால் அதை அப்படியே கொண்டு செல்லவேண்டியுள்ளது.
மேலும், போக்குவரத்து கழகத்தில் பணிபுரிபவா்கள் இது உதவிகரமாக, வசதியாக இருப்பதாக தெரிவிப்பதால் இது அப்படியே உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் 7 லட்சத்து 70 ஆயிரம் போ் அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்துள்ளனா்.
கடந்த காலத்தில் 6 லட்சத்து 60 ஆயிரம் போ் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனா். இந்த ஓராண்டில் ஒரு லட்சம் போ் கூடுதலாக பயணம் செய்துள்ளனா் என்றாா்.