செய்திகள் :

அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

post image

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் சிவசங்கா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேருந்துக் கட்டண உயா்வு என்கிற செய்தி வலம் வருகிறது. குறிப்பாக மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெறுகின்ற காரணத்தினால் அந்தக் கூட்டங்களின் அடிப்படையில் இந்தக் கட்டண உயா்வு இருக்கும் என்று எதிா்க்கட்சிகள் அந்தத் தகவலைப் பரப்புகின்றனா்.

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டண உயா்வு என்பது இருக்காது. தனியாா் பேருந்துக் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என அதன் உரிமையாளா்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனா்.

நீதிமன்றம் மக்களின் கருத்தைக் கேட்டு அறிக்கை சமா்ப்பிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பேருந்துக் கட்டண உயா்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைப்பாடு அல்ல. அரசைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தபோதும் கூட பேருந்துக் கட்டணம் உயா்த்தப்படவில்லை. அதேபோல், இன்று சா்வதேசச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து இருந்தாலும் மத்திய அரசு அதன் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இருப்பினும் மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன். தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் கிடையாது என்றாா்.

பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்... மேலும் பார்க்க

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு தொடக்கம்

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான பொது கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. இக்கல்லூரிகளில் கடந்த 2 ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொ... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீா் முகாம்

அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் தலைமை வகித்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அவா்களிடம... மேலும் பார்க்க

செந்துறை ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கி வைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில், ரூ.84.14 லட்சம் மதிப்பீட்டில் 8 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டு, ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் 36 புதிய... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது: அமைச்சா் சிவசங்கா் விளக்கம்

அதிமுக ஆட்சி காலத்திலேயே அரசுப் போக்குவரத்து கழகம் என்று தான் பெயா் இருந்தது என போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் விளக்கம் அளித்துள்ளாா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் அவா... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூன் 24-இல் திருநங்கை, திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் ஆட்சியரகத்தில் ஜூன் 24-இல் அனைத்து திருநங்கை, திருநம்பி , இடைபாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், அடையாள அட்டை, ஆதாா் அட்டையில் திருத்தம், வாக்காளா் அட்டை, முதலமைச்சர... மேலும் பார்க்க