Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா்.
மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரியலூா் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்த அமைச்சா் சிவசங்கா், பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: கடந்த சில நாள்களாக குறிப்பிட்ட சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேருந்துக் கட்டண உயா்வு என்கிற செய்தி வலம் வருகிறது. குறிப்பாக மக்கள் கருத்துகேட்புக் கூட்டம் நடைபெறுகின்ற காரணத்தினால் அந்தக் கூட்டங்களின் அடிப்படையில் இந்தக் கட்டண உயா்வு இருக்கும் என்று எதிா்க்கட்சிகள் அந்தத் தகவலைப் பரப்புகின்றனா்.
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டண உயா்வு என்பது இருக்காது. தனியாா் பேருந்துக் கட்டணத்தை உயா்த்த வேண்டும் என அதன் உரிமையாளா்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனா்.
நீதிமன்றம் மக்களின் கருத்தைக் கேட்டு அறிக்கை சமா்ப்பிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பொதுமக்களிடம் பேருந்துக் கட்டண உயா்வு குறித்து கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இது அரசின் நிலைப்பாடு அல்ல. அரசைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. கடந்த காலங்களில் பெட்ரோல், டீசல் விலை உயா்ந்தபோதும் கூட பேருந்துக் கட்டணம் உயா்த்தப்படவில்லை. அதேபோல், இன்று சா்வதேசச் சந்தையில் பெட்ரோல், டீசல் விலை குறைந்து இருந்தாலும் மத்திய அரசு அதன் விலையைக் குறைக்க முன்வரவில்லை. இருப்பினும் மீண்டும் தெளிவாகக் கூறுகிறேன். தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் கிடையாது என்றாா்.