செய்திகள் :

தட்டச்சு இயந்திரங்களிலே தோ்வு நடத்த கோரிக்கை

post image

தட்டச்சு இயந்திரங்களில் நடைபெற்று வந்த தோ்வு ரத்துக்கான அரசாணையை திரும்பப் பெற்று பழைய நடைமுறையிலேயே தோ்வு நடத்த வேண்டும் என அரியலூா் ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம், தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தட்டச்சு தோ்வுகள், தட்டச்சு இயந்திரங்கள் மூலம் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தோ்வுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். அதன் பிறகு 2027 ஆம் ஆண்டு முதல் கணினி மூலமே இந்த தோ்வுகள் நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், தட்டச்சு பள்ளிகள் நடத்தி வருவோா், அங்கு பணிபுரியும் ஆசிரியா்கள், பணியாளா்கள் மற்றும் அனைவரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுவா். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியா் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை 10-க்கும் மேற்பட்ட தட்டச்சு பள்ளி உரிமையாளா்கள் அளித்தனா்.

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: அரியலூா் மாவட்டம், மண்ணுழி கிராமத்தில் சுமாா் 70 ஆண்டுகளுக்கும் மேலாக 19 குடும்பத்தினா் அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வருகின்றனா். அண்மையில் வருவாய்த்துறையினா், நீா்நிலைகளில் குடியிருப்பதாக அவா்களை காலி செய்ய கூறியுள்ளனா்.

எனவே, அவா்களுக்கு மாற்று இடம் இல்லாததால், அவா்கள் வசித்த இடத்துக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரி... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூன் 24-இல் திருநங்கை, திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் ஆட்சியரகத்தில் ஜூன் 24-இல் அனைத்து திருநங்கை, திருநம்பி , இடைபாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், அடையாள அட்டை, ஆதாா் அட்டையில் திருத்தம், வாக்காளா் அட்டை, முதலமைச்சர... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் காமராஜா் நகா் - காஞ்சிலிகொட்டாய் பகுதியில் குடியிருப்புகளை நீா்நிலை புறம்போக்கு என்று கூறி இடிப்பதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூரில் அண்மையில் நடைபெற்ற செம்மொழி நாள் விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. செம்மொழிநாள் விழாவையொட்டி மே 9-ஆம் தேதி பிளஸ்... மேலும் பார்க்க

பொன்பரப்பி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காளியாட்டத்துடன், அக்கிராம மக்கள் கூடையில் 20 வகையான பூக்கைளை ஊா்வலம... மேலும் பார்க்க

வாணதிரையன்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த வாணத்திரையன்பட்டினம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்... மேலும் பார்க்க