பொன்பரப்பி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா
அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காளியாட்டத்துடன், அக்கிராம மக்கள் கூடையில் 20 வகையான பூக்கைளை ஊா்வலமாகக் கொண்டு வந்து மாரியம்மன் மற்றும் சாமுண்டீசுவரி அம்மனுக்கு சாத்தினா். பின்னா் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திராளன பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அதனைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவைத் தொடா்ந்து, 8-ஆம் தேதி அம்மன் வீதி உலாவும், சண்டியாகமும், 9-ஆம் தேதிபொன்னூஞ்சல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அக்கிராம மக்கள், விழா குழுவினா் செய்து வருகின்றனா்.