செய்திகள் :

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

post image

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன.

தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீதான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையையடுத்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இரு நாடுகளுக்கிடையேயான போரையடுத்து, முதன்முறையாக இருநாடுகளும் ஒரே கூட்ட அமர்வில் சந்தித்துக் கொண்டன. இருப்பினும், நேரடியாகவோ மறைமுகமாகவோ சந்தித்து உரையாடல் எதுவுமில்லை.

பனிப்பாறைகளைப் பாதுகாப்பது குறித்து சர்வதேச மாநாடு துஷான்பேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக வெளிறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் வெளியிட்ட புகைப்படத்தில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இருப்பது தெரிய வந்தது. இருப்பினும், அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.

தொடர்ந்து, சிங்கப்பூரில் நிகழ்ச்சியில் இந்திய முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் கலந்து கொண்டார். அதே கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதிநிதியாக ஜெனரல் ஸாஹிர் ஷம்ஷாத் மிர்சாவும் கலந்து கொண்டிருந்தார். அவர்கள் இருவரும்கூட சந்தித்துக் கொள்ளவில்லை.

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில்இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்றுராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால்... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க