செய்திகள் :

இறக்குமதி வரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

post image

கொல்கத்தா: சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதம் குறைக்க மத்திய அரசு முடிவு செய்ததைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் சில்லறை விற்பனையில் சமையல் எண்ணெய் விலை 56 சதவிகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய மாதங்களில் சமையல் எண்ணெய் விலை கிட்டத்தட்ட 17 சதவிகிதம் உயர்ந்த நிலையில், தற்போது விலைகள் இறுதியாக குளிர்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இது மேலும் ஒற்றை இலக்காகக் குறையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார் இமாமி அக்ரோடெக் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சுதாகர் ராவ் தேசாய்.

இந்த விலை குறைவு சுமார் பதினைந்து நாட்களில் சில்லறை விலைகளில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மொத்த சந்தையில் ஏற்கனவே விலைகள் குறைவதற்கான ஆரம்ப அறிகுறிகளைக் தென்பட்டுள்ளன என்றார் கிழக்கு இந்தியாவின் முன்னணி பிராண்டட் சமையல் எண்ணெய் உற்பத்தியாளரின் நிர்வாகி.

கொள்கை மாற்றம் இந்தியாவின் சமையல் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிலுக்கு புதிய உயிர் அளிக்கும் வகையில், இறக்குமதியைச் சார்ந்து இல்லாத கடுகு எண்ணெயும், ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக 34 சதவிகிதம் குறையக்கூடும் என்றார் தேசாய்.

கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் 12.5 சதவிகிதத்திலிருந்து 22.5 சதவிகிதமாக அதிகரித்திருப்பது, நிறுவனங்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து உள்நாட்டில் சுத்திகரிப்பதை கணிசமாக செலவு குறைந்ததாக மாற்றியுள்ளது. அதே வேளையில் 10 சதவிகித வரி குறைப்பு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் ஹால்டர் வென்ச்சர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேஷப் குமார்.

சோயாபீன், சூரியகாந்தி மற்றும் பாமாயில் ஆகிய இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்களின் உள்நாட்டு சில்லறை விலைகள் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!

தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை காலையும் உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு சில நாள்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களை ஒப்பிடுகையி... மேலும் பார்க்க

2-ஆம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8%

2025-ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் 15 முக்கிய இரண்டாம் நிலை நகரங்களில் வீடுகள் விற்பனை 8 சதவீதம் குறைந்துள்ளது.இது குறித்து சந்தை ஆலோசனை நிறுவனமான ப்ராப்ஈக்விட்டி வெளியிட்டுள்ள அறிக்... மேலும் பார்க்க

சில்லறை எரிபொருள் விற்பனை நிலையங்களை அமைக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன்!

சென்னை: இந்தியன் ஆயில் குழும நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் அதன் வைர விழா ஆண்டை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்காக சில்லறை விற்பனை நிலையங்களை அமைக்கும் பணியை மேற்கொண்டு... மேலும் பார்க்க

அறிமுகமான டாடா எலெக்ட்ரிக் புதிய ஹாரியர்.இவி கார்!

புதுதில்லி: டாடா மோட்டார்ஸ் இன்று அதன் மின்சார வாகன வரம்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. இது மின்சார எஸ்யூவி-யான ஹாரியர்.இவி-ஐ இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இது 500 கி.மீ. அதிகமான வரம்பைக் கொண்டுள்ளதாக... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 பைசா குறைந்து 85.60 ஆக முடிவடைந்தது. நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் உள்ளூர் பங்குச் சந்தைகள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில... மேலும் பார்க்க

அதானி குழுமத்தின் பங்குகள் சரிவுடன் முடிவு!

அதானி நிறுவனங்கள் தங்கள் முந்த்ரா துறைமுகம் வழியாக ஈரானிய எல்பிஜியை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ததா என்று அமெரிக்க விசாரித்து வருவதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்ட பிறகு, இன்றைய வர்த்தகத்தில் ... மேலும் பார்க்க