செய்திகள் :

``லஞ்சம் தராவிட்டால்.." - மிரட்டிய ஐஆர்எஸ் அதிகாரி; சிபிஐ வலையில் சிக்கியது எப்படி?

post image

டெல்லியில் வருமான வரி செலுத்துவோர் சேவை துறை இயக்குநரகத்தின் கூடுதல் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றுபவர் அமித் குமார் சிங்கால்.

இவர் மீது டெல்லியில் லாபினோவின் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூர் என்பவர் சிபிஐ-யிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் டெல்லி, பஞ்சாபில் உள்ள அமித் குமார் சிங்காலுக்கு சொந்தமான வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சி.பி.ஐ

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாவது, ``லாபினோவின் பீட்சா நிறுவனத்தின் உரிமையாளர் சனம் கபூருக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பிரச்னையை சரிசெய்ய அமித் குமார் சிங்கால் ரூ45 லட்சம் லஞ்சம் தரவேண்டும் எனவும், லஞ்சம் தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அபராதம் விதிப்பேன் எனவும் மிரட்டியிருக்கிறார். இந்த நிலையில்தான் சனம் கபூர் சிபிஐ-யிடம் புகார் அளித்தார்.

அந்தப் புகாரை தீவிரமாக விசாரித்தோம். எனவே, அமித் சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக் என்பவர் பீட்சா நிறுவன உரிமையாளரான சனம் கபூரிடம் முதல்கட்டமாக ரூ.25 லட்சத்தை லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக சிக்கினார். எனவே அமித் குமார் சிங்காலின் உதவியாளர் ஹர்ஷ் கோடக்கையும் கைது செய்துள்ளோம். அதன்பிறகுதான் அவரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

கைபற்றப்பட்ட பொருள்கள்
கைபற்றப்பட்ட பொருள்கள்

அப்போது ரூ.1கோடி ரொக்கம் மற்றும 3.5 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். வரும் 13- தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது." எனத் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது செய்த போலீஸ்

புதுக்கோட்டை போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது: 23) இவருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது,... மேலும் பார்க்க

அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சமையல் மாஸ்டர் உடல்; இறப்பு குறித்து விசாரணை!

திருச்சி, ஸ்ரீரங்கம், புலிமண்டபம் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்தவர் நாகராஜன் (வயது: 59). இவர் சமையல் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்... மேலும் பார்க்க

ரௌடி பொய்யாகுளம் தியாகுவுக்கு மாவுகட்டு; `என்கவுன்ட்டர்' குறித்து அச்சம் தெரிவிக்கும் மனைவி

காஞ்சிபுரம் ரௌடி ஸ்ரீதரின் கூட்டாளியாக வலம் வந்தவர் திருகாளி மேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ஏ ப்ளஸ் ரௌடி பொய்யாகுளம் தியாகு. இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் நி... மேலும் பார்க்க

ஹரியானா: 13 வயது பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை; காதலனுடன் பாஜக பெண் நிர்வாகி கைது; என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பா.ஜ.க நிர்வாகியான நிஷா தனது கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தார்.அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர் நிஷாவுடன் வசித்து வர... மேலும் பார்க்க

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க