செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

post image

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.

இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்தான் பயன்படுத்திய நிலையில், அவை இந்திய பாதுகாப்புப் படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது.

இதன் மூலம், பாகிஸ்தானுக்கு பின்னணியில் சீனா செய்த உதவிகள் வெளிச்சத்துக்கு வந்திருப்பதோடு, இந்திய மண்ணில் சுட்டு வீழ்த்தப்பட்ட சீன ஏவுகணைகள் மூலம், அதன் உருவாக்க தொழில்நுட்பத்தையும் இந்தியா கண்டுபிடித்துவிடுமோ என்ற அச்சத்தில் சீனா இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தியா மீது சுமார் 40 ஜெட் விமானங்கள், அமெரிக்காவின் எஃப்-16 வைப்பர்ஸ், சீனாவின் ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 வகை போர் நிமானங்களையும் பிஎல்-15இ என்ற வானிலிருந்து வானிலிருக்கும் இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் பாகிஸ்தான் பயன்படுத்தியிருந்தது.

பாகிஸ்தானுக்குப் பின்னணியில் இதுவரை மறைமுகமாக செயல்பட்டு வந்த சீனத்தின் முகம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதோடு, இந்திய தாக்குதல் நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் வான்பாதுகாப்பு அமைப்பு மற்றும் செயற்கைக்கோள் அமைப்பு மூலம் கண்டறிந்து பாகிஸ்தானுக்கு சீனா தெரிவித்துள்ளதாகவும் இந்தியா தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலின்போது, பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்டு இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிஎல்-15இ ஏவுகணைகளின் சேதமான பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.

ஏவுகணையின் பகுதிகளில், அதன் உந்துவிசை, தகவல், தரவு இணைப்பு, உள்செயலாக்க அலகு உள்ளிட்டவை சேதமடையாமல் அப்படியே இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதமடைந்த ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.

இதோடு, ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகள், ஏவுகணையின் இரட்டைத்திறன் மோட்டார் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து விவரங்களைத் தெரிவிக்குமாறு கோரியுள்ளன. இது சீனாவின் மிக வேகமாக வளரும் இராணுவ தொழில்நுட்பம் குறித்த தகவல்களை அறிந்துகொள்ளும் உலக நாடுகளின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

இந்த சேதமடைந்த ஏவுகணையின் மூலம், அதன் மீள்உருவாக்கத்தை பாதுகாப்புப் படை பொறியாளர்கள் ஏற்படுத்துவார்கள் என்றும், மேம்படுத்தப்பட்ட பல ஏவுகணைகளின் தொழில்நுட்பத்தைக் கண்டறிவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இதனால், தனது ஏவுகணை தொழில்நுட்பம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்குத் தெரிந்துவிடுமோ என்ற கவலையில் சீனா இருப்பதர்கவும் கூறப்படுகிறது.

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க