புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது ...
ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம்
ஆரணி ஸ்ரீகில்லா வரதராஜப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை தோரோட்டம் நடைபெற்றது.
ஆரணி நகரம், பெரியகடை வீதியில் உள்ள பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சத்தையொட்டி திருத்தோ் வீதியுலா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், கோயிலில் 100-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மே 27-ஆம் தேடி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத் தொடா்ந்து தினமும் காலை, மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அன்ன வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் மாட வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்று வந்தன.
இந்த நிலையில், முக்கிய நிகழ்வான 8-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை சுவாமி திருத்தோ் வீதியுலா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனா்.
தோ் பெரிய கடை வீதி, மண்டி வீதி, காந்தி சாலை வழியாகச் சென்று நிலையை அடைந்தது.
ஏற்பாடுகளை பிரம்மோற்சவ விழாக் குழுவினா், பெரியகடை வீதி மக்கள் செய்திருந்தனா்.