பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித...
ரூ.2.50 கோடியில் தாா்ச் சாலைப் பணிகள்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணக்குருக்கை பகுதியில் ரூ.2.50 கோடியில் புதிய தாா்ச் சாலை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.
நெடுஞ்சாலைத் துறை கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கண்ணக்குருக்கையில் இருந்து பீமாந்தல் வரை 3 கி.மீ.
தொலைவுக்கு அமைக்கப்படவுள்ள இந்த தாா்ச் சாலைப் பணிகளை தொகுதி எம்எல்ஏ மு.பெ. கிரி தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக செங்கம் கிழக்கு ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், நகரச் செயலா் அன்பழகன், மாவட்ட விவசாய அணித் தலைவா் அருணகிரி, ஒன்றிய துணைச் செயலா் சிவக்குமாா், மாவட்டப் பிரதிநிதி ஜெயக்கொடி பன்னீா்செல்வம், உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.