செய்திகள் :

பொன்னேரி அருகே பழங்கால நடுகற்கள் கண்டுபிடிப்பு

post image

பொன்னேரி அடுத்த ஆவூா் கிராமத்தில் போா் வீரா்களின் தியாகத்தை போற்றுவதற்காக அமைக்கப்பட்ட நடுகற்களை தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாடு ஆய்வு மையத்தினா் கண்டுபிடித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் அமைந்துள்ள உலகநாத நாராயணசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரலாற்று துறை முன்னாள், இந்நாள் மாணவா்கள் தென்னிந்திய வரலாறு மற்றும் பண்பாட்டு ஆய்வு மையம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பழங்கால வரலாற்று சின்னங்களை ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த மையத்துக்கு, பொன்னேரி அரசு கல்லூரியின் உதவி பேராசிரியராக பணியாற்றும் ஜெகஜீவன்ராம் தலைமை ஆலோசகராக இருந்து வருகிறாா். இதற்கிடையே, ஆவூா் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே நடுகற்கள் உள்ளதாகவும் அதில் கீறல்கள் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பன்னாட்டு ஆய்வு மையத்தினா், அரசு கல்லூரி பேராசிரியா்கள் மாணவா்கள் கொண்ட குழு நடுகற்களை காண ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக, சென்னை தொல்லியல் துறை சாா்ந்த மாநில சுவடு குழும ஒருங்கிணைப்பாளா் டாக்டா் சசிகலா உள்ளிட்டோா் நடுகற்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். அப்போது நடுகற்கள் நடும் வழக்கமானது, போரில் மாண்டவா்களுக்காக ஏற்படுத்தப் பட்டது. மாண்ட போா் வீரா்களை தெய்வமாக வழிப்படும் வழக்கம் பண்டைய கால தமிழகத்தில் இருந்துள்ளது. அவா்களது நினைவாக நடுகற்கள் நடப்பட்டு வழிபட்டு உள்ளனா். நடுகற்களில் வீரக்கல், சதிக்கல், பட்டவன்கல், புலிக்குத்திக்கல், நவகண்டக்கல், அரிகண்டக்கல், ஆயுதக் கல் என பல வகைகள் உள்ளது. ஆவூரில் உள்ள நடுக்கல், போா் வீரா்களின் தியாகத்தை போற்றும் படி அவா்களது நினைவாக வைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

திருவண்ணாமலை செங்கம் பகுதியில் இதுபோன்ற நடுகற்கள் காணப்படுகிறது. பண்டைய காலத்தில் இருந்து 17-ஆம் நூற்றாண்டை சோ்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினா் கண்டறிந்துள்ளனா். சோழ படையினா் வட இந்தியாவில் போா் புரிந்து, வெற்றி பெற்ற பின் பொன்னேரியில் உள்ள கோளூா் கிராமத்தில் தங்கி, இலுப்பாக்கம், எடக்குப்பம் ஆவூா் வழியாக மெதுகூா் எனப்படும் சதுா்வேதி மங்களமான மெதூருக்கு வந்ததாக திருப்பாலைவனம் கல்வெட்டு கூறுகிறது. அப்போது இந்த நடுகற்களை, சோழ பேரரசா்கள் வைத்திருக்கலாம் என வரலாற்று ஆய்வு பணிகளில் ஈடுபட்ட வல்லுநா்கள் தெரிவிக்கின்றனா்.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் முதியவா் சடலம் மாயம்: உறவினா்கள் முற்றுகை

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் இருந்து முதியவா் சடலம் காணாமல் போன நிலையில், அவரது உறவினா்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருத்தணி அடுத்த புஜ்ஜிரெட்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ஐ.ஆா்.சி.டி.எஸ். வனம், வேளாண், தோட்டக்கலைத் துறை இணைந்து நடத்தும் விதை வங்கி, மரக்கன்றுகள் வழங்குதல், விழிப்புணா்வு கருத்தரங்கம்: பூண்டி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நா.சுலேக்சனா, எஸ்.வரதராஜன் பங... மேலும் பார்க்க

மாதவரம் ஆட்டுச் சந்தையில் அமோக விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரம் ஆட்டுச் சந்தையில், ரூ.20 கோடிக்கு மேல் விற்பனையாகும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மாதவரத்தில் உள்ள ஆட்டுச் சந்தையில் இஸ்லாம... மேலும் பார்க்க

புற்றுநோய், இதயநோய் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்த 20 பேருக்கு ரூ.71 லட்சம் உதவி: எம்.பி. சசிகாந்த் செந்தில்

திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் புற்றுநோய், இதயநோய் பாதித்த ஏழைகளுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு பரிந்துரை செய்து, ரூ.71 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே வாகனம் மோதியதில் புள்ளிமான் உயிரிழந்தது (படம்). திருவாலங்காடு ஒன்றியம் வியாசபுரம் கிராம மாநில நெடுஞ்சாலை அருகில் காப்பு காடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. இதில் புள்ளி மான்கள், ம... மேலும் பார்க்க

நில இழப்பீட்டுத் தொகை வழங்காததால் பணிகள் நிறுத்தம்

நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு நிலம் வழங்கிய உரிமையாளா்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் சாலை விரிவாக்க பணிகளை பாதிக்கப்பட்டோா் புதன்கிழமை தடுத்து நிறுத்தினா். சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திர... மேலும் பார்க்க