செய்திகள் :

வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை: ஷ்ரேயாஸ் ஐயர்

post image

ஐபிஎல் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கோலாகலமாகத் தொடங்கிய 18-வது ஐபிஎல் சீசன் நாளையுடன் நிறைவடைகிறது. அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இதையும் படிக்க: ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

வேலை இன்னும் முடியவில்லை

இறுதிப்போட்டியில் நாளை விளையாடவுள்ள நிலையில், வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை என பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: அழுத்தமான சூழலில் சிறப்பாக செயல்பட்டு அணிக்காக போட்டியை வென்று கொடுப்பது உலகின் மிகவும் சிறந்த உணர்வைத் தரக் கூடியது. மும்பைக்கு எதிரான எனது ஆட்டத்தை, நான் விளையாடியதிலேயே சிறந்த ஆட்டம் எனக் கூறுவேன். இதுபோன்ற சூழல்களில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். சேஸிங் செய்யும் இடத்தில் இருந்தால், அணிக்குத் தேவையான ரன் ரேட் எவ்வளவு, ஆடுகளம் எப்படி இருக்கிறது, எந்த பந்துவீச்சாளர்கள் பந்துவீசப் போகிறார்கள் என்பதையெல்லாம் பார்ப்பேன்.

அதன் அடிப்படையில் எனது ஆட்டத்தின் வியூகங்களை வகுத்து விளையாடுவேன். ஆட்டத்தினை இறுதி வரை எடுத்துச் செல்ல முயற்சி செய்வேன். இந்த அத்தனை விஷயங்களும் துல்லியமாக செயல்படுத்தப்பட வேண்டும். என்னுடைய வேலை இன்னும் முழுமையாக முடியவில்லை. பாதி மட்டுமே முடிந்துள்ளது. நாளை இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

நடப்பு ஐபிஎல் சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், 11 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து வந்துள்ளார்.

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

அதிர்ஷ்ட மந்திரம்: இறுதிப் போட்டிகளில் தோற்காத ஹேசில்வுட்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் (34) விளையாடியுள்ள அனைத்து இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹேசி... மேலும் பார்க்க

18தான் காரணம்! ஆர்சிபிக்கு வாழ்த்து தெரிவித்த தேர்தல் ஆணையம்!

ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதிப் போட்டி ... மேலும் பார்க்க

7-வது முறையாக ஃபேர் பிளே விருது வென்ற சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஃபேர் பிளே (Fair Play) விருது வென்றுள்ளது.ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!

பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலக் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதி... மேலும் பார்க்க

கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று முதல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ... மேலும் பார்க்க

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒ... மேலும் பார்க்க