செய்திகள் :

சென்னை விமான நிலைய ஓடுபாதையில் பறவைகளை விரட்ட புதிய கருவிகள்!

post image

சென்னை சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் இடையூறாக இருக்கும் பறவைகளை விரட்டுவதற்காக புதிய கருவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த விமான நிலையத்தின் ஓடுதளத்தில், விமானங்கள் தரையிறங்கும்போதும் புறப்படும்போதும் இடையூறாக இருக்கும் பறவைகளை விரட்ட பட்டாசு வெடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், பட்டாசுகளை வெடிப்பதன் மூலம் பறவைகளின் இடையூறு 100 சதவிகிதம் குறைக்க முடியவில்லை என்பதால், இடி ஓசை எழுப்பக் கூடிய ’தண்டர் பூம்ஸ்’ என்ற 30 கருவிகளை விமானப் போக்குவரத்துத் துறை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

விமானங்களை பறவைகள் தாக்கும் அபாயத்தை குறைக்கவும், பாதுகாப்பான விமான இயக்கத்தை உறுதி செய்யவும் புதிய கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது ஐஆர்சிடிசி!

பறக்கும் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னையில் உள்ள புகா் பறக்கும் ரயில் நிலையங்களை (எம்ஆா்டிஎஸ்), 12 பெட்டிகள் கொண்ட ரயில்களை நிறுத்தும் வகையில், விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் ஆய்வு மேற்கொள்ள... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக செங்குன்றம், முகப்போ் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும். இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மா... மேலும் பார்க்க

‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் 30,506 பேருக்கு இணை நோய்கள் கண்டுபிடிப்பு

‘தொழிலாளா்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் கீழ் இதுவரை 30,506 பேருக்கு இணைநோய்கள் கண்டறியப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பணி... மேலும் பார்க்க

பாம்பு கடித்து இறந்த நூறு நாள் பணியாளா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

நூறு நாள் வேலை செய்த இடத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக முதல்வா் மு.... மேலும் பார்க்க

ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள் தயாரிக்க ரூ.1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், ஓட்டுநா் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் ‘அல்ஸ்டோம் ட்ரான்ஸ்போா்ட் இந்தியா’ நி... மேலும் பார்க்க

தமிழ்நாடு கிராம உதவியாளா் பணி: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

தமிழ்நாடு கிராம உதவியாளா் பணிக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, வாசித்தல், எழுதும் திறனுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய் ம... மேலும் பார்க்க