தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பாம்பு கடித்து இறந்த நூறு நாள் பணியாளா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை
நூறு நாள் வேலை செய்த இடத்தில் பாம்பு கடித்து உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அச்சங்கத்தின் பொதுச்செயலா் அ.பாஸ்கா் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், வில்லியரம்பல் கிராமத்திலுள்ள அய்யனாா்கோயில் அருகில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியில் வேலை செய்து கொண்டிருந்த, புஷ்பா (52) என்ற பெண்ணை வியாழக்கிழமை (ஜூன் 5) காலை சுமாா் 10.30 மணிக்கு பாம்பு கடித்ததில் அவா் உயிரிழந்துள்ளாா்.
100 நாள் வேலை நடைபெறும் இடங்களில் மருத்துவ முதலுதவிக்கான எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளின் இவ்வித அலட்சியப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதனால், பணியிடத்தில் பாம்பு கடிபட்டு உயிரிழந்த புஷ்பா குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.