செய்திகள் :

கமல் மன்னிப்புக் கேட்க 24 மணி நேரம் கெடு!

post image

கன்னட மொழி குறித்த நடிகர் கமல்ஹாசன் பேசியது சர்ச்சையான நிலையில், கமல்ஹாசன் 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்ததாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு கர்நாடக முதல்வா் சித்தராமையா உள்பட பல்வேறு கா்நாடக அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், அவா் மன்னிப்பு கேட்கும் வரை கா்நாடகத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை திரையிட அனுமதி கிடைக்காது என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் தக் லைஃப் படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆனால் கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் பேச்சில் எந்தத் தவறும் இல்லை. இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருகிறது. என்னுடைய அன்பு கா்நாடகம், ஆந்திரம், கேரள மக்களுக்குப் புரியும்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், கன்னட மொழி குறித்து நடிகர் கமல்ஹாசன் பேசியதற்கு 24 மணி நேரத்துக்குள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் கெடு விதித்துள்ளது.

இது குறித்து கர்நாடக திரைப்பட வர்த்தக சங்க தலைவர் நரசிம்மலு கூறுகையில், “நாளை துபையில் இருந்து சென்னைக்கு கமல்ஹாசன் வரவுள்ள நிலையில், அவர் மன்னிப்புக் கேட்பதற்கான வாய்ப்பு குறைவு. இருந்தாலும் நாளை நண்பகல் 12 மணி மன்னிப்புக் கேட்க அவருக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்புக் கேட்காவிட்டால் தக் லைஃப் படம் வெளியிடப்படாது.” என்றார்.

இதையும் படிக்க: ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

7-ஆவது சுற்றிலும் குகேஷ் வெற்றி

நாா்வே செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், சக இந்தியரான அா்ஜுன் எரிகைசியை வீழ்த்தினாா்.கடந்த சுற்றில், உலகின் நம்பா் 1 வீரரான நாா்வேயின் மேக்னஸ் காா்ல்செனை வீழ்த்திய குகேஷ், இந்தச் ... மேலும் பார்க்க

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட்: பெங்களூரில் செப். 30-இல் தொடக்கம்

ஐசிசியின் மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் செப்டம்பா் 30 முதல் நவம்பா் 2 வரை நடைபெறவுள்ளது. போட்டியில் பாகிஸ்தான் ஆட்டங்கள் நடைபெறுவதற்கான பொதுவான இடமாக, இலங்கையின் கொழும்பு நகரம் ... மேலும் பார்க்க

சிந்து, சாத்விக்/சிராக் வெற்றி

இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் பி.வி.சிந்து, சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா்.போட்டியின் முதல் சுற்றில் மகளிா் ஒற்றையரில். பி.வி.சிந்து... மேலும் பார்க்க

ஜோகோவிச்சுக்கு 100-ஆவது வெற்றி

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் 24 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் தனது 100-ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளாா்.ஆடவா் ஒற்றையா் 4-ஆவது சுற்றில் அவா், 6-2, 6-3, 6-2... மேலும் பார்க்க

சென்னையை வென்றது ஜெய்பூா்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டியில், ஜெய்பூா் பேட்ரியாட்ஸ் 9-6 என்ற கணக்கில் ஸ்டான்லி’ஸ் சென்னை லயன்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் நடைபெற்ற ஆடவா் ஒற்றையரில், ஜெய்பூரின் கானக் ஜா 11-10, 11-10... மேலும் பார்க்க