Africa: போர் வீரன் டு அதிபர் - ஆப்பிரிக்காவின் `புதிய ஒளி' இப்ராஹிம் டிராரே ஏன் ...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
பரமத்தி வேலூா்: நல்லூா் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் வட்டம், திடுமல் கவுண்டம்பாளையம் அருகே உள்ள செம்மாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமி (60). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்டதாலும், குழந்தைகள் இல்லாததாலும் லட்சுமி தனியாக வசித்து வந்தாா்.
இந்த நிலையில், லட்சுமி தனியாக இருப்பதை அறிந்த மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றாா். புகாரின் பேரில், நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை தேடிவருகின்றனா்.