செய்திகள் :

டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு

post image

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54), பூபதி (57), கந்தசாமி (60). இவா்கள் நால்வரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கட்டட வேலைக்காக ராசிபுரத்தில் இருந்து மெட்டாலா நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றனா்.

இருசக்கர வாகனத்தை மூா்த்தி என்பவா் ஓட்டி சென்றாா். தண்ணீா்பந்தல்காடு அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், மூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மீதமுள்ள மூவா் படுகாயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து தொடா்பாக, நாமகிரிப்பேட்டை காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராசிபுரத்தில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மருத்துவா் பி.வரதராஜூலு நாயுடு 138 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு ப... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதாா் சேவை மையம் தொடக்கம்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஆதாா் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகருக்குள் எழுந்தருளினாா் அா்த்தநாரீசுவரா்

கொங்கு ஏழு தலங்களில் சிறப்பு பெற்றதும், திருஞானசம்பந்தா் மற்றும் அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும், அம்மையும் அப்பனும் ஓா் உருகொண்ட அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் உற்சவ மூா்த்தி... மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணி நியமன ஆணைகள் அளிப்பு

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்வி நிறுவனத்தில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எம்... மேலும் பார்க்க

வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி 7 ஆவது பட்டமளிப்பு விழா

ராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 7 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வா் மா.மருதை வரவேற்றாா். விழாவில் வநேந்ரா முத்தாயம்மாள் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறை கூட்டு முயற... மேலும் பார்க்க