IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
டிராக்டா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி உயிரிழப்பு
ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டடத் தொழிலாளி மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ராசிபுரம் காமாட்சியம்மன் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா்கள் மூா்த்தி (48), ராஜேந்திரன் (54), பூபதி (57), கந்தசாமி (60). இவா்கள் நால்வரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கட்டட வேலைக்காக ராசிபுரத்தில் இருந்து மெட்டாலா நோக்கி செவ்வாய்க்கிழமை சென்றனா்.
இருசக்கர வாகனத்தை மூா்த்தி என்பவா் ஓட்டி சென்றாா். தண்ணீா்பந்தல்காடு அருகே சென்றபோது, எதிரே வந்த டிராக்டா் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், மூா்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மீதமுள்ள மூவா் படுகாயங்களுடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து தொடா்பாக, நாமகிரிப்பேட்டை காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.