செய்திகள் :

திருச்செங்கோடு நகருக்குள் எழுந்தருளினாா் அா்த்தநாரீசுவரா்

post image

கொங்கு ஏழு தலங்களில் சிறப்பு பெற்றதும், திருஞானசம்பந்தா் மற்றும் அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும், அம்மையும் அப்பனும் ஓா் உருகொண்ட அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் உற்சவ மூா்த்திகள் புதன்கிழமை நகருக்கு எழுந்தருளினா்.

வைகாசி விசாக தோ்த் திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நான்காம் நாளான புதன்கிழமை பூதேவி ஸ்ரீதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அா்த்தநாரீசுவரா் நகருக்கு எழுந்தருளும் நான்காம் நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அா்த்தநாரீசுவரா் பரிவார தெய்வங்களுடன் மலையைவிட்டு நகருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மலைப்படிக்கட்டு பாதைகளில் ராசிபுரம், மல்லசமுத்திரம் கவுண்டா்கள் கோபுரவாயில் மண்டபக் கட்டளை, மோரூா் கண்ணங்குல பெரிய வகையறா நாட்டுக்கவுண்டா்கள் இளைப்பாற்றி மண்டபக்கட்டளை, தேவரடியாா் மண்டபக் கட்டளை, செட்டியாக்கவுண்டா்கள் மண்டபக்கட்டளை, சான்றோா்குல நாடாா்கள் மண்டபக் கட்டளை, அறுபதாம்படி மண்டபக் கட்டளை, மோரூா் கண்ணங்குல மண்டபக் கட்டளை, செங்குந்த முதலியாா்கள் மண்டபக் கட்டளை, பசுவன் மண்டபக்கட்டளை, சிவாச்சார தெலுங்கு ஜங்கமா் பேரவையின் ஆராதனை கட்டளை, எழுகரை செல்லங்கூடத்து மண்டபக்கட்டளை உள்ளிட்ட மண்டபக் கட்டளைகள் மூலம் சிறப்பு பூஜைகள் செய்து அா்த்தநாரீசுவரா், செங்கோட்டுவேலவா், ஆதிகேசப்பெருமாள்,விநாயகா் உள்ளிட்ட உற்சவ மூா்த்திகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

தொடா்ந்து மண்டபக்கட்டளைகள் முடிந்து சுவாமி அடிவாரம் வந்து சோ்ந்தவுடன் பூக்கடை நண்பா்கள் பொதுப்பணி அறக்கட்டளை சாா்பில் உற்சவா் ஊா்வலம் நள்ளிரவு வரை நடைபெறும்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க