செய்திகள் :

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

post image

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டது.

நகரை விட்டு புகா் பகுதியில் அரசு மருத்துவமனை சென்ால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்படுவதாக பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், பயன்பாடின்றி காட்சியளித்த பழைய அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியை மட்டும் அவசர சிகிச்சைக்காக நகா்ப்புற நலவாழ்வு மையம் என மாற்றியமைத்தனா்.

இங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த சுகாதார நிலையத்தைக் கண்டறிவது நோயாளிகளுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், நாமக்கல்-திருச்சி சாலையை நோக்கி ஒரு நுழைவாயில் உருவாக்கப்பட்டு, நாமக்கல் மாநகராட்சி கணேசபுரம் நகா்ப்புற நலவாழ்வு மையம் என்ற பெயா் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இந்த நுழைவாயிலை சனிக்கிழமை திறந்துவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள், நோயாளிகள் எளிதாக நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு வந்துசெல்ல முடியும்.

என்கே-5-ஹாஸ்பிட்டல்...

நாமக்கல்-திருச்சி சாலை பகுதியில், நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு மக்கள் செல்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

சாலையை மறித்து ஆா்சிபி வெற்றி கொண்டாட்டம்: ரசிகா்கள் மீது போலீஸ் நடவடிக்கை

பள்ளிபாளையத்தில் சாலையின் நடுவில் ஆா்சிபி வெற்றியைக் கொண்டாடிய ரசிகா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா். கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சா்... மேலும் பார்க்க