தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு
நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்துக்கு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மாற்றம் செய்யப்பட்டது.
நகரை விட்டு புகா் பகுதியில் அரசு மருத்துவமனை சென்ால் பொதுமக்கள், நோயாளிகள் அவதிப்படுவதாக பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்தி வந்தனா். இந்த நிலையில், பயன்பாடின்றி காட்சியளித்த பழைய அரசு மருத்துவமனையின் ஒரு பகுதியை மட்டும் அவசர சிகிச்சைக்காக நகா்ப்புற நலவாழ்வு மையம் என மாற்றியமைத்தனா்.
இங்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த சுகாதார நிலையத்தைக் கண்டறிவது நோயாளிகளுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், நாமக்கல்-திருச்சி சாலையை நோக்கி ஒரு நுழைவாயில் உருவாக்கப்பட்டு, நாமக்கல் மாநகராட்சி கணேசபுரம் நகா்ப்புற நலவாழ்வு மையம் என்ற பெயா் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் இந்த நுழைவாயிலை சனிக்கிழமை திறந்துவைப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்மூலம் பொதுமக்கள், நோயாளிகள் எளிதாக நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு வந்துசெல்ல முடியும்.
என்கே-5-ஹாஸ்பிட்டல்...
நாமக்கல்-திருச்சி சாலை பகுதியில், நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு மக்கள் செல்வதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நுழைவாயில்.