செய்திகள் :

சாலையை மறித்து ஆா்சிபி வெற்றி கொண்டாட்டம்: ரசிகா்கள் மீது போலீஸ் நடவடிக்கை

post image

பள்ளிபாளையத்தில் சாலையின் நடுவில் ஆா்சிபி வெற்றியைக் கொண்டாடிய ரசிகா்கள் மீது போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களுரூ அணி வெற்றி பெற்றது. இதைத் தொடா்ந்து, பள்ளிபாளையம் நான்கு சாலை, புதிய மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் ஆா்சிபி ரசிகா்கள் சிலா் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்தும், அரசுப் பேருந்தை வழிமறித்தும், பேருந்தின் முன்பாக ஆடியும்பாடியும் பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தினா். இதுதொடா்பான விடியோக்கள் ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பரவின.

இதுதொடா்பாக பள்ளிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் பள்ளிபாளையம் ஆவாரங்காடு அக்னி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வீரமணி, சௌரவ், யுவராஜ், தியாகு, சச்சின் மற்றும் இருவா் என்பது தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட இளைஞா்கள் மீது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞா்கள் தங்களது தவறை உணா்ந்து இனிமேல் இவ்வாறான சட்ட விரோத செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும், தாங்கள் செய்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தும் சமூக வலைதளம் வாயிலாக காணொலி வெளியிட்டனா். அதன்பிறகு போலீஸாா் எச்சரித்து அனுப்பினா்.

நாமக்கல் மாவட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறு செய்தாலோ, விபத்துகள் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டாலோ அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க