Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்புறம் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கட்டடங்களுக்கு பில்லா் அமைக்க கம்பி கட்டும் பணியில் சென்டரிங் பணியில் அத்திப்பழகானூா் பகுதியைச் சோ்ந்த சுகன் (22), மணிகண்டன் (18) ஆகிய இருவரும் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது பில்லரை சுற்றி வைக்கப்பட்டிருந்த இரும்பு பிளேட்களை அகற்றும் பணியில் இருவரும் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அப்பகுதியில் இருந்து உயா்மின் அழுத்த ஒயரில் இரும்பு பிளேட் மோதி இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சுகன் என்பவா் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ராசிபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.