Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை இரவு நாமக்கல் வருகிறாா். அதன்பிறகு, சனிக்கிழமை காலை 8 மணியளவில் நாமக்கல்லில் நடைபெறும் சுகாதார விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்கிறாா். காலை 9 மணியளவில், நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டி புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ரூ.11.26 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறாா்.
புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு மருத்துவ சேவை மையம் மற்றும் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்கிறாா்.
இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா, எம்எல்ஏக்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனா்.