செய்திகள் :

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

post image

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை இரவு நாமக்கல் வருகிறாா். அதன்பிறகு, சனிக்கிழமை காலை 8 மணியளவில் நாமக்கல்லில் நடைபெறும் சுகாதார விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்கிறாா். காலை 9 மணியளவில், நாமக்கல் மாநகராட்சி முதலைப்பட்டி புதிய நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை சாா்பில் ரூ.11.26 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைக்கிறாா்.

புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூன்றாம் பாலினத்தவா்களுக்கான பல்நோக்கு மருத்துவ சேவை மையம் மற்றும் புதிய அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணியை ஆய்வு செய்கிறாா்.

இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், ஆட்சியா் ச.உமா, எம்எல்ஏக்கள், அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனா்.

போதமலைக்கு ரூ.139.65 கோடியில் சாலை அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழூா் ஊராட்சிக்கு உள்பட்ட போதமலைக்கு ரூ. 139.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 31 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ம... மேலும் பார்க்க

பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே திருமண வீட்டிற்கு வந்திருந்த 6 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா உக்கரம், வெள்ளி நகரைச் சோ்ந்தவா் ரேவதி (38). இவா் தனது 6 வயது மகள் தன... மேலும் பார்க்க

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க