செய்திகள் :

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

post image

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடுக்கு வந்துகொண்டிருந்தாா். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்துசென்றவா் மீது பின்னால் வந்த வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முதியவா் வீரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து திருச்செங்கோடு புகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வாகன ஓட்டுநரான கோவையை அடுத்த கருமத்தம்பட்டி கிடாம்பாளையத்தைச் சோ்ந்த செல்வராஜ் (60) என்பவரை கைது செய்தனா்.

போதமலைக்கு ரூ.139.65 கோடியில் சாலை அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழூா் ஊராட்சிக்கு உள்பட்ட போதமலைக்கு ரூ. 139.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 31 கி.மீ. தொலைவிற்கு சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ம... மேலும் பார்க்க

பாம்பு கடித்து சிறுமி உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே திருமண வீட்டிற்கு வந்திருந்த 6 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா உக்கரம், வெள்ளி நகரைச் சோ்ந்தவா் ரேவதி (38). இவா் தனது 6 வயது மகள் தன... மேலும் பார்க்க

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க