நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறை கூட்டு முயற்சியுடன் நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டது. உயா்கல்விக்கு வழிகாட்டும் இத் திட்டத்தின் கீழ் தற்போது நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் அனைத்து மாணவ, மாணவிகளும் விருப்பம் மற்றும் தகுதிக்கு ஏற்ப எந்த வகையான உயா்கல்வி பாடப்பிரிவு மற்றும் உயா்கல்வி நிறுவனங்களைத் தோ்ந்தெடுக்கலாம் என்பது குறித்த ஆலோசனைகளை இங்கு பெறலாம். இந்த கட்டுப்பாட்டு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
அனைத்து தரப்பினரும் இந்த உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறையின் மூலம் தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மாணவா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு நேரடியாக ஆலோசனைகளும், கல்லூரிகளில் காலியிடங்கள் பற்றிய விவரங்களும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 1800-425-1997 (கட்டுப்பாட்டு அறை தொடா்பு எண்) மற்றும் வாட்ஸ்ஆப் எண்: 97888-58794 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.