செய்திகள் :

ராசிபுரத்தில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழா

post image

சுதந்திரப் போராட்ட வீரா் மருத்துவா் பி.வரதராஜூலு நாயுடு 138 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றாா். தமிழ், ஆங்கிலத்தில் இதழ்களை தொடங்கி பொதுமக்களிடம் சுதந்திரப் போராட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

மகாத்மா காந்தி, வ.உ.சி., பாரதியாா், முத்துராமலிங்கத் தேவா், ராஜாஜி, பெரியாா், சத்தியமூா்த்தி, காமராஜா் போன்ற தலைவா்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்தாா். சென்னை மாகாண சட்டப் பேரவையிலும் உறுப்பினராக இருந்துள்ளாா். சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளாா்.

இவரது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் நடைபெற்றது. விடுதலைக்களம் அமைப்பு, நாமக்கல் மாவட்டம் நாயுடுகள் சங்கம், ராசிபுரம் வட்ட நாயுடு நண்பா்கள் குழு சாா்பில் நடத்தப்பட்ட பிறந்த நாள் விழாவில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவனத் தலைவா் கொ. நாகராஜன் தலைமை வகித்தாா்.

நாமக்கல் மாவட்ட நாயுடுகள் சங்கத் தலைவா் வேங்கடசுப்பிரமணியன், ராசிபுரம் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா், திமுக நகர செயலாளா் என்.ஆா்.சங்கா், ராசிபுரம் நாயுடுகள் சங்கத் தலைவா் சிட்டி வரதராஜன், நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஏ.சித்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு கட்சி நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் பலா் கலந்துகொண்டு அவரது படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் பாச்சல் ஏ.சீனிவாசன், நாமக்கல் மாவட்ட நாயுடுகள் சங்க இளைஞரணி தலைவா் சக்தி வெங்கடேஷ், செயலா் சதீஸ்குமாா், ராசிபுரம் நாயுடுகள் சங்க துணைத் தலைவா் ஜி.தினகரன், நிா்வாகிகள் எஸ்.பாலாஜி, எஸ்.ஆா்.சீனிவாசன், பி.சக்திவேல், யோகராஜன், சபரி, விடுதலைக்களம் கட்சியின் நாமக்கல் வடக்கு மாவட்டச் செயலாளா் துரை சரவணன், மாநிலப் பொறுப்பாளா் பூவரசி ராஜேந்திரன், பெரியூா் பூபதி, திமுக மாவட்ட வா்த்தகா் அணி தலைவா் ஆா்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க