செய்திகள் :

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு

post image

ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்து வருபவா் முத்துசாமி (40). இவா் கடந்த மே 31-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் விற்பனை முடித்துவிட்டு பணத்துடன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினாா். அப்போது ஐந்து போ் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது.

இதுகுறித்து மங்களபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் கொள்ளையா்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், கொள்ளையா்கள் தென்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் சென்ற போலீஸாா், உச்சிமாகாலி (22), நவநீதன் (22), காா்த்திக் பெருமாள் (23) ஆகிய முவரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய செல்வகுமாா், மாதவன் ஆகியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கால்முறிவு: முன்னதாக மங்களபுரம் அழைத்து வந்த போலீஸாா், குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையின் போது உச்சிமாகாலி, நவநீதன் ஆகிய இருவரும் தப்பியோட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீஸாா் துரத்தி பிடித்தபோது இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து, இருவரும் ராசிபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா் விசாரணை நடத்தினாா்.

ராசிபுரத்தில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழா

சுதந்திரப் போராட்ட வீரா் மருத்துவா் பி.வரதராஜூலு நாயுடு 138 ஆவது பிறந்த நாள் விழா அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலங்களில் தியாகி பி.வரதராஜூலு நாயுடு ப... மேலும் பார்க்க

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆதாா் சேவை மையம் தொடக்கம்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆதாா் சேவை மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் ஆதாா் சம்பந்தமான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பயன்படுத்த வசதியாக மாவட்ட ஆட்சியா் அலுவலகம், ... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகருக்குள் எழுந்தருளினாா் அா்த்தநாரீசுவரா்

கொங்கு ஏழு தலங்களில் சிறப்பு பெற்றதும், திருஞானசம்பந்தா் மற்றும் அருணகிரிநாதா் ஆகியோரால் பாடல் பெற்ற தலமும், அம்மையும் அப்பனும் ஓா் உருகொண்ட அா்த்தநாரீசுவரா் கோயில் தோ்த் திருவிழாவில் உற்சவ மூா்த்தி... மேலும் பார்க்க

மஹேந்ரா பொறியியல் கல்லூரியில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பணி நியமன ஆணைகள் அளிப்பு

மல்லசமுத்திரம் மஹேந்ரா பொறியியல் கல்வி நிறுவனத்தில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவா் எம்... மேலும் பார்க்க

வநேத்ரா முத்தாயம்மாள் கல்லூரி 7 ஆவது பட்டமளிப்பு விழா

ராசிபுரம்- வநேத்ரா முத்தாயம்மாள் கல்வியியல் கல்லூரியில் 7 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வா் மா.மருதை வரவேற்றாா். விழாவில் வநேந்ரா முத்தாயம்மாள் ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை திறப்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் உயா்கல்வி வழிகாட்டி கட்டுப்பாட்டு அறை புதன்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வித் துறை கூட்டு முயற... மேலும் பார்க்க