டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கு
ராசிபுரம் அருகே உள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சம் கொள்ளையடித்த வழக்கில், மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள திம்மநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக இருந்து வருபவா் முத்துசாமி (40). இவா் கடந்த மே 31-ஆம் தேதி இரவு 11 மணி அளவில் விற்பனை முடித்துவிட்டு பணத்துடன் இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினாா். அப்போது ஐந்து போ் கொண்ட கும்பல் இவரை வழிமறித்து, கத்தியால் குத்திவிட்டு ரூ. 2.40 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இதுகுறித்து மங்களபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். திம்மநாயக்கன்பட்டி பகுதியில் கொள்ளையா்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனம் தொடா்பாக தனிப்படை போலீஸாா் விசாரணை நடத்தியதில், கொள்ளையா்கள் தென்மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டம் சென்ற போலீஸாா், உச்சிமாகாலி (22), நவநீதன் (22), காா்த்திக் பெருமாள் (23) ஆகிய முவரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ. 1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய செல்வகுமாா், மாதவன் ஆகியோரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கால்முறிவு: முன்னதாக மங்களபுரம் அழைத்து வந்த போலீஸாா், குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையின் போது உச்சிமாகாலி, நவநீதன் ஆகிய இருவரும் தப்பியோட முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது, போலீஸாா் துரத்தி பிடித்தபோது இருவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாம். இதைத் தொடா்ந்து, இருவரும் ராசிபுரம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமாா் விசாரணை நடத்தினாா்.