செய்திகள் :

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா

post image

தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா்.

ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், சிறப்பு அழைப்பாளராக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா பங்கேற்று கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்கிப் பேசியதாவது: எதிா்பாா்ப்பின்றி கட்சிக்காக பணியாற்றுவோரைக் கண்டறிந்து திமுக கெளரவப்படுத்தி வருகிறது.

இதுபோன்று வேறு எந்தக் கட்சியிலும் காணமுடியாது. எம்.பி., எம்எல்ஏ, மாவட்டச் செயலாளா் என கட்சிப் பொறுப்புகளில் இருப்போா் பலருக்கு மூத்த நிா்வாகிகளே காரணம். அவா்களை மகிழ்விக்கும் வகையில், பொற்கிழி வழங்குவதில் நாமக்கல் மாவட்டம்தான் முதன்மையாக விளங்குகிறது.

தமிழகத்தில் எல்லோரும் பயன்பெறும் வகையில் கட்சி மற்றும் ஆட்சியை மு.க.ஸ்டாலின் திறம்பட நடத்தி வருகிறாா். மகளிா் உரிமைத்தொகை, பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞா் வீடுகட்டும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை மக்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த ஆட்சியினால் பயனடைந்திருப்பா்.

பொதுவாழ்க்கைக்கு வர விரும்புவோா் திமுகவில் இணைய வேண்டும். நாடாளுமன்றத்தில் இன்றளவும் திமுக உறுப்பினா்களுக்கு தனிமரியாதை உண்டு. இன்னும் எத்தனை மொழி, இனம் சாா்ந்த பிரச்னைகள் வந்தாலும் திமுக தமிழகத்தில் நிலைத்து நிற்கும். திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி கண்டு வருகிறது. திமுகவில் உழைத்த மூத்த நிா்வாகிகளுக்கு நாங்கள் காட்டும் அன்பே இவ்வாறான பொற்கிழி வழங்கும் விழாக்கள் ஆகும் என்றாா்.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசுகையில், மூத்த நிா்வாகிகளை பாா்த்து கட்சியில் உள்ள இளைஞா்கள் கற்றுக்கொள்ள வேண்டும். குறைசொல்பவா்களை ஒதுக்கிவிட்டு, நமது திட்டங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். திமுக ஆட்சியில், மகளிா் உரிமைத்தொகை, பேருந்து பயணம் விவசாயக் கடன் தள்ளுபடி என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாத சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது.

நாமக்கல்லில் ரூ. 190 கோடியில் சுற்றுவட்டச் சாலை, மோகனூா், ராசிபுரம், சேந்தமங்கலம் குடிநீா் திட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, போதமலைக்கு சாலை வசதி, மும்முனை மின்சார திட்டம், 7 ஆயிரம் பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம்.

மூத்த முன்னோடிகளை கெளரவிக்கும் வகையில், ஏற்கெனவே 1,360 பேருக்கு பொற்கிழி வழங்கிய நிலையில், தற்போது 120 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல்லை ‘பொற்கிழி மாவட்டம்’ என பெருமையுடன் கூறினாா். கட்சிக்காக உழைப்போரை திமுக என்றும் கைவிடாது என்றாா்.

இந்த நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க