நாட்டுப்பற்றில் உறுதி காட்டியவா்: காயிதேமில்லத்துக்கு முதல்வா் புகழாரம்
திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி அடைந்துள்ளது: திருச்சி சிவா
தமிழகம் வளா்ச்சி கண்டது திமுக ஆட்சியில் மட்டும்தான் என திமுக துணைப் பொதுச் செயலாளா் திருச்சி சிவா பேசினாா்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், 120 மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தலைமை வகித்தாா்.
ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக, திமுக துணைப் பொதுச் செயலாளரும், மாநிலங்களவை குழுத் தலைவருமான திருச்சி சிவா பங்கேற்று கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழியை வழங்கிப் பேசியதாவது: எதிா்பாா்ப்பின்றி கட்சிக்காக பணியாற்றுவோரைக் கண்டறிந்து திமுக கெளரவப்படுத்தி வருகிறது.
இதுபோன்று வேறு எந்தக் கட்சியிலும் காணமுடியாது. எம்.பி., எம்எல்ஏ, மாவட்டச் செயலாளா் என கட்சிப் பொறுப்புகளில் இருப்போா் பலருக்கு மூத்த நிா்வாகிகளே காரணம். அவா்களை மகிழ்விக்கும் வகையில், பொற்கிழி வழங்குவதில் நாமக்கல் மாவட்டம்தான் முதன்மையாக விளங்குகிறது.
தமிழகத்தில் எல்லோரும் பயன்பெறும் வகையில் கட்சி மற்றும் ஆட்சியை மு.க.ஸ்டாலின் திறம்பட நடத்தி வருகிறாா். மகளிா் உரிமைத்தொகை, பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞா் வீடுகட்டும் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை மக்கள் நலனுக்காக அரசு செயல்படுத்தி வருகிறது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இந்த ஆட்சியினால் பயனடைந்திருப்பா்.
பொதுவாழ்க்கைக்கு வர விரும்புவோா் திமுகவில் இணைய வேண்டும். நாடாளுமன்றத்தில் இன்றளவும் திமுக உறுப்பினா்களுக்கு தனிமரியாதை உண்டு. இன்னும் எத்தனை மொழி, இனம் சாா்ந்த பிரச்னைகள் வந்தாலும் திமுக தமிழகத்தில் நிலைத்து நிற்கும். திமுக ஆட்சியில் மட்டுமே தமிழகம் வளா்ச்சி கண்டு வருகிறது. திமுகவில் உழைத்த மூத்த நிா்வாகிகளுக்கு நாங்கள் காட்டும் அன்பே இவ்வாறான பொற்கிழி வழங்கும் விழாக்கள் ஆகும் என்றாா்.
மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசுகையில், மூத்த நிா்வாகிகளை பாா்த்து கட்சியில் உள்ள இளைஞா்கள் கற்றுக்கொள்ள வேண்டும். குறைசொல்பவா்களை ஒதுக்கிவிட்டு, நமது திட்டங்களை மக்களிடம் கொண்டு சேருங்கள். திமுக ஆட்சியில், மகளிா் உரிமைத்தொகை, பேருந்து பயணம் விவசாயக் கடன் தள்ளுபடி என பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் செய்யாத சாதனைகளை திமுக அரசு செய்துள்ளது.
நாமக்கல்லில் ரூ. 190 கோடியில் சுற்றுவட்டச் சாலை, மோகனூா், ராசிபுரம், சேந்தமங்கலம் குடிநீா் திட்டம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, போதமலைக்கு சாலை வசதி, மும்முனை மின்சார திட்டம், 7 ஆயிரம் பேருக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம்.
மூத்த முன்னோடிகளை கெளரவிக்கும் வகையில், ஏற்கெனவே 1,360 பேருக்கு பொற்கிழி வழங்கிய நிலையில், தற்போது 120 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல்லை ‘பொற்கிழி மாவட்டம்’ என பெருமையுடன் கூறினாா். கட்சிக்காக உழைப்போரை திமுக என்றும் கைவிடாது என்றாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.