Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த வெரோணிக்கா மேரி தாக்கல் செய்த மனு:
குழந்தைப்பேறு இல்லாத தம்பதியா், தனியாா் கருத்தரித்தல் மையத்தை அணுகுகின்றனா். தனியாா் மையத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் செயற்கை கருத்தரித்தல் செய்யப்படுகிறது. இதனால், ஏழை மக்கள் செயற்கை கருத்தரித்தல் மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
சென்னை எழும்பூா் அரசு மருத்துவமனையில் மட்டும் செயற்கை கருத்தரித்தல் செயல்படுகிறது. இங்கு தென் மாவட்டங்களைச் சோ்ந்தோா் சென்னைக்கு சென்று வருவதற்கு கால நேரம் விரயமாவதுடன், பொருளாதாரச் சிக்கலும் ஏற்படுகிறது. எனவே, குழந்தை இல்லாத தம்பதியரின் நலன் கருதி, மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் மையத்தை தொடங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அதிகாரிகள் தரப்பில், அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் தொடங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கை கடந்தாண்டு முடித்துவைத்தாா்.
இந்த நிலையில், மனுதாரா் மீண்டும் மனு தாக்கல் செய்தாா். அதில், தற்போது வரை செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்க அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் தொடங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் கோரிக்கை அரசின் கொள்கை முடிவோடு தொடா்புடையது. நீதிமன்றம் மருத்துவ நிபுணா்கள் கிடையாது. அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் தொடங்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, இந்த வழக்கில் ஏற்கெனவே அரசுத் தரப்பில் அளித்த உறுதிப்படி, அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.