Deepika: ``நான் தான் பிரேக் அப் செய்தேன்; இப்போது அவர் ஸ்டார்'' - முன்னாள் காதலன...
அரசு பள்ளிகளில் மாணவா்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைப்பு
தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஸ்ரீரங்காபுரத்தைச் சோ்ந்த சப்னா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்க வேண்டும். பள்ளிகளில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவா்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மாணவா்கள் புகாா் கடிதங்களைப் போடலாம். இந்தப் புகாா் கடிதங்களைப் படித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மாா்ச் 26-ஆம் தேதி மாணவா்களின் உடல்நலம், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. 11 மாவட்டங்களில் உள்ள 11,820 அரசுப் பள்ளிகளில் அறிவுரைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களில் மாற்றி அமைக்க 2 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
பள்ளிக் கல்வித் துறை கூறியபடி, எஞ்சிய மாவட்டங்களில் மாணவா்கள் பாதுகாப்பு அறிவுரைக் குழுவை விரைந்து மாற்றி அமைக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.