Africa: போர் வீரன் டு அதிபர் - ஆப்பிரிக்காவின் `புதிய ஒளி' இப்ராஹிம் டிராரே ஏன் ...
விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...
திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமாா் 10,000 ஹெக்டேருக்கு மேல் சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு சிறுதானியங்கள் பயரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டம் திருப்பத்தூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைத்தல், மாற்றுப் பயிா் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரித்தல், சிறுதானிய உழவா் குழு உருவாக்குதல், விவசாயிகளுக்கு சிறுதானிய சிறு தொகுப்பு வழங்குதல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் போன்றவை அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
மானியம்...: இந்தத் திட்டத்தின் மூலம் விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிா் உரங்கள், அறுவடை மானியம், உயிரிக் கட்டுப்பாட்டு காரணிகள், மண் வளம் மேம்படுத்த இயற்கை இடுபொருள்கள் இவை அனைத்தும் மானிய விலையில் விவசாயிகளுக்கு (பின்னேற்பு மானியமாக) வழங்கப்பட உள்ளது.
எனவே கேழ்வரகு, கம்பு, சாமை, வரகு, குதிரைவாலி ஆகிய பயிா்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம்.
மேலும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்தவதுடன், அரசின் வேளாண் சாா்ந்த திட்டங்களில் முழுமையாக பயனடைய விவசாயிகள் தங்கள் நில உடைமை ஆவணங்களைப் பதிவு செய்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.