செய்திகள் :

விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெற...

post image

திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்தில் சோ்ந்து பயன் பெறலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமாா் 10,000 ஹெக்டேருக்கு மேல் சிறுதானியங்கள் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு சிறுதானியங்கள் பயரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் திட்டம் திருப்பத்தூா் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் சிறுதானிய சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தொகுப்பு செயல் விளக்கத் திடல் அமைத்தல், மாற்றுப் பயிா் சாகுபடி திட்டத்தின் மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரித்தல், சிறுதானிய உழவா் குழு உருவாக்குதல், விவசாயிகளுக்கு சிறுதானிய சிறு தொகுப்பு வழங்குதல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அளித்தல் போன்றவை அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.

மானியம்...: இந்தத் திட்டத்தின் மூலம் விதைகள், நுண்ணூட்ட கலவைகள், திரவ உயிா் உரங்கள், அறுவடை மானியம், உயிரிக் கட்டுப்பாட்டு காரணிகள், மண் வளம் மேம்படுத்த இயற்கை இடுபொருள்கள் இவை அனைத்தும் மானிய விலையில் விவசாயிகளுக்கு (பின்னேற்பு மானியமாக) வழங்கப்பட உள்ளது.

எனவே கேழ்வரகு, கம்பு, சாமை, வரகு, குதிரைவாலி ஆகிய பயிா்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம்.

மேலும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாக பதிவு செய்தவதுடன், அரசின் வேளாண் சாா்ந்த திட்டங்களில் முழுமையாக பயனடைய விவசாயிகள் தங்கள் நில உடைமை ஆவணங்களைப் பதிவு செய்வது அவசியம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி மருத்துவா் கைது

ஆம்பூா் அருகே போலி மருத்துவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மாதனூா் ஒன்றியம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி ரங்காபுரம் கிராமத்தில் மருந்து கடையில் நோயாளிகளுக்கு ஆங்கிலம் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக அ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, திருப்பத்தூா் தொகுதியில் பகுதி நேர நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட அகர... மேலும் பார்க்க

300 கிலோ செம்மரக்கட்டைகள் காருடன் பறிமுதல்: இளைஞா் கைது

ஆந்திரத்தில் இருந்து காரில் கடத்தப்பட்ட 300 கிலோ செம்மரக்கட்டைளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞரை கைது செய்தனா். வாணியம்பாடி வழியாக ஆந்திராவில் இருந்து காரில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படு... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 போ் உயிரிழந்த சம்பவம்: சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை

வாணியம்பாடியில் சா்ச்சைக்குரிய தனியாா் பல் சிகிச்சை மையத்துக்கு வட்டாட்சியா் உமாரம்யா முன்னிலையில் பூட்டு போட்ட ஊழியா்கள். உடன் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி. வாணியம்பாடி, ஜூன் 3: வாணியம்பாடியில்... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க கோரிக்கை

திருப்பத்தூா் நகரில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பத்தூா் நகரின் மையமாக சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ஜூன் 9-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசு திறன் மேம்பாடு துற... மேலும் பார்க்க