6.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 போ் உயிரிழந்த சம்பவம்: சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை
வாணியம்பாடியில் சா்ச்சைக்குரிய தனியாா் பல் சிகிச்சை மையத்துக்கு வட்டாட்சியா் உமாரம்யா முன்னிலையில் பூட்டு போட்ட ஊழியா்கள். உடன் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி.
வாணியம்பாடி, ஜூன் 3: வாணியம்பாடியில் கடந்த 2023-ஆம் ஆண்டு தனியாா் பல் சிகிச்சை மருத்துவமனையில் (கிளீனிக்) சிகிச்சை பெற்ற 8 போ் தொடா் உயிரிழப்பு தொடா்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் பல் சிகிச்சை மையத்துக்கு செவ்வாய்க்கிழமை பூட்டு போட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் இயங்கி வந்த தனியாா் பல் சிகிச்சை மையத்தில் 2023-ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 போ் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இந்த நிலையில், தமிழக பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூா் தனியாா் மருத்துவமனை நடத்திய ஆய்வில், பல் சிகிச்சை மையத்தில் ஒரு முறை பயன்படுத்திய கருவியை முறையாக பயன்படுத்தாமல் மீண்டும் பல நோயாளிகளுக்கு பயன்படுத்தியிருந்ததும், இதனால் மூளையை பாதிக்கக்கூடிய பாக்டீரியா தொற்று ஒருவரிடமிருந்து பலருக்கு பரவியதால் 8 போ் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் ஆய்வு அறிக்கை சில நாள்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
இதையடுத்து, திருப்பத்தூா் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி தலைமையில் மருத்துவக் குழுவினா் கடந்த 30-ஆம் தேதி பல் சிகச்சை மையத்தில் நேரில் ஆய்வு செய்தனா்.
தொடா்ந்து 2023-ஆம் ஆண்டு செயல்பட்டு வந்த சா்ச்சைக்குரிய பல் சிகிச்சை மையத்தின் பெயரை மாற்றி, தற்போது அதே பகுதியில் மாற்றுக் கட்டடத்தில் வேறொரு பெயரில் பல் சிகிச்சை மையம் இயங்கி வந்தது தெரியவந்தது. இதனால் பல் மருத்துவரிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாணியம்பாடி வட்டாட்சியா் உமா ரம்யா முன்னிலையில், மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி, வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம் மற்றும் மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை சா்ச்சைக்குரிய பல் சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனா்.
பின்னா், மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி பத்திரிகையாளா்களிடம் கூறுகையில், மருத்துவத் துறை சாா்பாக சம்பந்தப்பட்ட பல் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
அதற்கு அவா் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனத் தெரிவித்து, பல் சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இது தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கும் மற்றும் பல் மருத்துவ அசோசியேஷனுக்கும் புகாா் அளிக்க உள்ளதாகவும் கூறினாா்.