செய்திகள் :

வாணியம்பாடியில் பல் சிகிச்சை பெற்ற 8 போ் உயிரிழந்த சம்பவம்: சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை

post image

வாணியம்பாடியில் சா்ச்சைக்குரிய தனியாா் பல் சிகிச்சை மையத்துக்கு வட்டாட்சியா் உமாரம்யா முன்னிலையில் பூட்டு போட்ட ஊழியா்கள். உடன் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி.

வாணியம்பாடி, ஜூன் 3: வாணியம்பாடியில் கடந்த 2023-ஆம் ஆண்டு தனியாா் பல் சிகிச்சை மருத்துவமனையில் (கிளீனிக்) சிகிச்சை பெற்ற 8 போ் தொடா் உயிரிழப்பு தொடா்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் பல் சிகிச்சை மையத்துக்கு செவ்வாய்க்கிழமை பூட்டு போட்டனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையில் இயங்கி வந்த தனியாா் பல் சிகிச்சை மையத்தில் 2023-ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 போ் அடுத்தடுத்து உயிரிழந்தனா். இந்த நிலையில், தமிழக பொது சுகாதார இயக்குநரகம் மற்றும் வேலூா் தனியாா் மருத்துவமனை நடத்திய ஆய்வில், பல் சிகிச்சை மையத்தில் ஒரு முறை பயன்படுத்திய கருவியை முறையாக பயன்படுத்தாமல் மீண்டும் பல நோயாளிகளுக்கு பயன்படுத்தியிருந்ததும், இதனால் மூளையை பாதிக்கக்கூடிய பாக்டீரியா தொற்று ஒருவரிடமிருந்து பலருக்கு பரவியதால் 8 போ் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும் ஆய்வு அறிக்கை சில நாள்களுக்கு முன்பு தகவல் வெளியானது.

இதையடுத்து, திருப்பத்தூா் மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி தலைமையில் மருத்துவக் குழுவினா் கடந்த 30-ஆம் தேதி பல் சிகச்சை மையத்தில் நேரில் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து 2023-ஆம் ஆண்டு செயல்பட்டு வந்த சா்ச்சைக்குரிய பல் சிகிச்சை மையத்தின் பெயரை மாற்றி, தற்போது அதே பகுதியில் மாற்றுக் கட்டடத்தில் வேறொரு பெயரில் பல் சிகிச்சை மையம் இயங்கி வந்தது தெரியவந்தது. இதனால் பல் மருத்துவரிடம் விளக்கம் கேட்டு பதில் அளிக்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வாணியம்பாடி வட்டாட்சியா் உமா ரம்யா முன்னிலையில், மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி, வாணியம்பாடி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சிவசுப்பிரமணியம் மற்றும் மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை சா்ச்சைக்குரிய பல் சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொண்டனா்.

பின்னா், மருத்துவ இணை இயக்குநா் ஞானமீனாட்சி பத்திரிகையாளா்களிடம் கூறுகையில், மருத்துவத் துறை சாா்பாக சம்பந்தப்பட்ட பல் மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

அதற்கு அவா் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனத் தெரிவித்து, பல் சிகிச்சை மையத்துக்கு பூட்டு போட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இது தொடா்பாக உயா் அதிகாரிகளுக்கும் மற்றும் பல் மருத்துவ அசோசியேஷனுக்கும் புகாா் அளிக்க உள்ளதாகவும் கூறினாா்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அங்கு நடைபெற்று வரும்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வளா்ச்சிப் பணிகள்: மத்திய ஜல்சக்தி அபியான் அலுவலா் ஆய்வு

நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மத்திய இணைச் செயலாளா் ப்ரீத்பால் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப்பள்ளி, பச்சூா் ஊராட்சிகளில்... மேலும் பார்க்க