புதுக்கோட்டை: 'மதுபோதையில் தகராறு; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்!' - 7 பேரை கைது ...
திருப்பத்தூா்: போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க கோரிக்கை
திருப்பத்தூா் நகரில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் நகரின் மையமாக சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள் நடமாட்டம் உள்ளதால் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.
மேலும், திருப்பத்தூா் மாவட்டத் தலைநகராக மாறிய பின்பு அரசு அலுவலகங்களுக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு போக்குவரத்து சிக்னல் பிரதான சாலையில் 4 இடங்களில் அமைக்கப்பட்டது.
ஆனால், அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகர காவல் நிலையம் அருகே உள்ள சிக்னல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது வரை மீதமுள்ள 3 சிக்னல்கள் இயங்கவில்லை. அதிலும் நகர காவல் நிலையம் அருகே உள்ள சிக்னல் அவ்வப்போது பழுதாகிறது. மீதமுள்ள 3 சிக்னல்கள் உள்பட 4 சிக்னல்களும் தானியங்கியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துமாற்றம்...
கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஷோ் ஆட்டோக்கள் பிரதான சாலையில் செல்வதை மாவட்ட காவல் துறை நிறுத்தி இருந்தது. தற்போது பிரதான சாலைகளில் தனி ஆட்டோ மற்றும் ஷோ் ஆட்டோக்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் கூடுதலாகிறது.
குறிப்பாக பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது.
எனவே பழையபடி திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலை- அண்ணா ச ாலை வழியாக ஷோ் ஆட்டோக்கள் சென்று அரசு மருத்துவமனைவழியாக வர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்,.