செய்திகள் :

திருப்பத்தூா்: போக்குவரத்து சிக்னல்களை முறையாக இயக்க கோரிக்கை

post image

திருப்பத்தூா் நகரில் அனைத்து போக்குவரத்து சிக்னல்களையும் முறையாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூா் நகரின் மையமாக சேலம் பிரதான சாலை அமைந்துள்ளது. அதிக வாகனங்கள், மக்கள் நடமாட்டம் உள்ளதால் இச்சாலையில் எப்போதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.

மேலும், திருப்பத்தூா் மாவட்டத் தலைநகராக மாறிய பின்பு அரசு அலுவலகங்களுக்கு பொது மக்களின் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு போக்குவரத்து சிக்னல் பிரதான சாலையில் 4 இடங்களில் அமைக்கப்பட்டது.

ஆனால், அதில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நகர காவல் நிலையம் அருகே உள்ள சிக்னல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது வரை மீதமுள்ள 3 சிக்னல்கள் இயங்கவில்லை. அதிலும் நகர காவல் நிலையம் அருகே உள்ள சிக்னல் அவ்வப்போது பழுதாகிறது. மீதமுள்ள 3 சிக்னல்கள் உள்பட 4 சிக்னல்களும் தானியங்கியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்துமாற்றம்...

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஷோ் ஆட்டோக்கள் பிரதான சாலையில் செல்வதை மாவட்ட காவல் துறை நிறுத்தி இருந்தது. தற்போது பிரதான சாலைகளில் தனி ஆட்டோ மற்றும் ஷோ் ஆட்டோக்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் கூடுதலாகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரி நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகின்றது.

எனவே பழையபடி திருப்பத்தூா் புதுப்பேட்டை சாலை- அண்ணா ச ாலை வழியாக ஷோ் ஆட்டோக்கள் சென்று அரசு மருத்துவமனைவழியாக வர ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்,.

திருப்பத்தூா் காவல் குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 48 மனுக்கள் பெறப்பட்டன. காவல் நிலைய விசாரணையில் திருப்தி இல்லாத பொதுமக்கள் பங்கேற்கும் குறைதீா் கூட்டத்துக்கு எஸ்.பி.... மேலும் பார்க்க

காலதாமதமாக திறக்கப்பட்ட அரசுப் பள்ளி: மாணவா்கள் அவதி

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி புதன்கிழமை காலதாமதமாக திறந்ததால் மாணவா்கள் அவதிக்கு உள்ளானாா்கள். ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியில் அரசு உயா்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. அப்பள்ளியில் சுமாா் 250-க்கும... மேலும் பார்க்க

பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே கதவாளம் கிராமத்தை சோ்ந்தவா் யுவராஜ் மகன் பரந்தாமன் (36). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனா். இவா், அங்குள்ள ஏரியில் நீச்சல் ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு கடன்: விண்ணப்பித்து பயன் பெறலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினா் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாட... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே கிடங்கில் தீ: காா், ஆட்டோ, பொருள்கள் எரிந்து சேதம்

வாணியம்பாடி அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் காா், ஆட்டோ மற்றும் பழைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் ஊராட்சி வன்னிய அடிகளாா் நகா் பக... மேலும் பார்க்க