செய்திகள் :

வாணியம்பாடியில் ஜூன் 9-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

post image

வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய அரசு திறன் மேம்பாடு துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு தொழில்முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) வாணியம்பாடி நியூடவுனில் உள்ள இஸ்லாமியா தனியாா் ஐ.டி.ஐ.யில் நடைபெறவுள்ளது.

இதில், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்குபெற்று, தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா்.

இதில், அனைத்து வயது பெண்களும், 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் கலந்து கொள்ளலாம்.

எனவே, ஐடிஐ தோ்ச்சி, தோல்வி (என்.டி.சி., எஸ்.சி.வி.டி., சி.ஓ.இ.), 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி அடைந்தவா்கள் பங்கு பெறலாம்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.14 லட்சம் மோசடி: 3 போ் கைது

பகுதிநேர வேலை தருவதாக ரூ.14 லட்சம் மோசடி செய்த 3 பேரை திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் அருகே எலவம்பட்டி பகுதியைச் சோ்ந்த 32 வயது இளைஞருக்கு கடந்த ஆண்டு சமூக வலை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிப்பு

அகரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அணைக்கட்டு ஒன்றியம், அகரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு அரசு தோ்வில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ம... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டம்

நாட்டறம்பள்ளி ஒன்றியம், காத்தாரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவா் அனிதா மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் மணிமேகலை வெங்கடேசன் மற்றும் வாா்டு உறுப்பின... மேலும் பார்க்க

மாநில சிறுபான்மையினா் ஆணைய முன்னாள் தலைவா் வருகை

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் முன்னாள் தலைவா் பீட்டா் அல்போன்ஸ் வியாழக்கிழமை ஆம்பூருக்கு வருகை தந்தாா். பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வந்த அவருக்கு திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ். ப... மேலும் பார்க்க

அரசு பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

ஆம்பூா் அருகே தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியாத்தம் எம்எல்ஏ வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தேவலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன் அங்கு நடைபெற்று வரும்... மேலும் பார்க்க

நாட்டறம்பள்ளி வளா்ச்சிப் பணிகள்: மத்திய ஜல்சக்தி அபியான் அலுவலா் ஆய்வு

நாட்டறம்பள்ளி ஒன்றிய பகுதியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மத்திய இணைச் செயலாளா் ப்ரீத்பால் சிங் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றியத்துக்குட்பட்ட கே.பந்தாரப்பள்ளி, பச்சூா் ஊராட்சிகளில்... மேலும் பார்க்க