வாணியம்பாடியில் ஜூன் 9-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்
வாணியம்பாடியில் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு திறன் மேம்பாடு துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு தொழில்முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணைந்து, மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம் திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாபெரும் பிரதான் மந்திரி தேசிய தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம் வரும் திங்கள்கிழமை (ஜூன் 9) வாணியம்பாடி நியூடவுனில் உள்ள இஸ்லாமியா தனியாா் ஐ.டி.ஐ.யில் நடைபெறவுள்ளது.
இதில், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு, தனியாா் தொழில் நிறுவனங்கள் பங்குபெற்று, தொழிற்பழகுநா் பயிற்சி வழங்க உள்ளனா்.
இதில், அனைத்து வயது பெண்களும், 40 வயதுக்கு உட்பட்ட ஆண்களும் கலந்து கொள்ளலாம்.
எனவே, ஐடிஐ தோ்ச்சி, தோல்வி (என்.டி.சி., எஸ்.சி.வி.டி., சி.ஓ.இ.), 8, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி, தோல்வி அடைந்தவா்கள் பங்கு பெறலாம்.