செய்திகள் :

Instagram Reels: மணப்பெண்ணுக்கு மீன் வடிவில் தலை அலங்காரம்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

பொதுவாக மணமக்கள் திருமணத்திற்கு முன்பு தங்களை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு விஷயங்களைச் செய்வார்கள்.

அடுத்தவர்கள் பிரமிக்கும் அளவிற்கு அழகாக இருக்க வேண்டுமென உடை, நகை அனைத்தையும் பார்த்துப் பார்த்து வாங்குவார்கள்.

தங்களது திருமணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்ற பல்வேறு விஷயங்களைச் செய்கின்றனர்.

மெஹந்தி, ஹல்டி, நிச்சயதார்த்தம், முகூர்த்தம் எனப் பல்வேறு நிகழ்வுகளைத் திருமணத்தில் அரங்கேற்றுகின்றனர். இதற்கான ஏற்பாட்டையும் வித்தியாசமான முறையில் செய்கின்றனர்.

அந்த வகையில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் ஒருவர் மீன் வடிவில் தனது தலையை அலங்கரித்துக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிறப்பான நாளன்று வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருக்க வேண்டும் என்று விரும்புவதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், வைரலாகும் வீடியோவில் தலை முடியிலேயே மீன் வடிவத்தைப் போன்று அலங்கரித்ததுதான் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ரிஷவ் என்ற ஹேர் ஸ்டைலிஸ்ட் மணப்பெண் கோலத்தில் இருக்கும் பெண்ணுக்கு மீன் வடிவில் தலை முடி அலங்காரம் செய்துள்ளார்.

செதில்கள், துடுப்புகள் மற்றும் கண் போன்ற அனைத்து வடிவங்களும் அந்த ஹேர் ஸ்டைலிங் இடம் பெற்றுள்ளன.

இந்த ஒப்பனை முற்றிலும் வித்தியாசமாக இருப்பதால் பலரும் அந்த வீடியோவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

உபி: "ஏன் பழைய மிச்சரைக் கொடுத்த?" - ஊழியருக்கு நீதிபதி அனுப்பிய சம்மன் வைரல்; பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண் நீதிபதி மதிய உணவு இடைவெளியில் கோர்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விருந்தினர் ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிரு... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற இடத்தில் சிங்கம் கொடூரமாக தாக்கி பலியான பயணி - என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெர்ன்ட் கெப்பல் என்ற தொழிலதிபரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடந்த... மேலும் பார்க்க

குஜராத்: "தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டுகிறேன்" - கார்கள் இருந்தும் சைக்கிளை விரும்பும் தொழிலதிபர்

குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறார்.குஜராத் மாநிலம் சூரத்தில் டெக்ஸ்டைல் மில்கள் வைத்திருப்பவர் சுரேஷ் ஜரிவாலா(70). இவர் தனது இளம் வயதில் சைக்... மேலும் பார்க்க

Big Ticket: லாட்டரியில் 11 லட்சம் வென்ற இந்தியர்; பல முறை அழைத்தும் NO Reply; பரிசு கிடைத்ததா?

லாட்டரி டிக்கெட்டில் ரூ.11 லட்சம் வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவருக்கு ஏற்பாட்டாளர்கள் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர்.ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி பணம் அவருக... மேலும் பார்க்க

Reborn doll: குழந்தையைப் போலத் தத்ரூபமாக இருக்கும் பொம்மைகள்; சர்ச்சையைக் கிளப்பக் காரணம் என்ன?

வழக்கமான பொம்மைகள் போன்று இல்லாமல் இந்த ரீபான் (Reborn) பொம்மைகள், தத்ரூபமாக உண்மையான குழந்தைகளைப் போன்று உள்ளன. இதனை மக்கள் ஆர்வமுடன் கையில் வைத்து மகிழ்கின்றனர். சமீபத்தில் கூட இது தொடர்பான வீடியோக்... மேலும் பார்க்க

தேர்தல் பத்திரம்: நன்கொடை அளித்த நிறுவனத்திற்கு டெண்டர்? உச்ச நீதிமன்ற தலையீட்டால் பணிந்த மகா. அரசு

மும்பை அருகில் உள்ள தானே என்ற இடத்திலிருந்து மும்பையின் மேற்கு பகுதியில் இருக்கும் பயந்தர் என்ற இடத்தை இணைக்கும் விதமாக, மலை மற்றும் வனவிலங்குகள் வாழக்கூடிய வனப்பகுதி வழியாகப் பூமிக்கு அடியில் சுரங்க ... மேலும் பார்க்க