செய்திகள் :

சுற்றுலா சென்ற இடத்தில் சிங்கம் கொடூரமாக தாக்கி பலியான பயணி - என்ன நடந்தது?

post image

தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெர்ன்ட் கெப்பல் என்ற தொழிலதிபரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மே 30ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. செஸ்ஃபோன்டைன் (Sesfontein )பகுதியில் உள்ள ஹோனிப் ஸ்கெலிட்டன் கோஸ்ட் கேம்ப் அருகே தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் விடுமுறையைக் கழிப்பதற்காக, ஒரு விடுதியில் கெப்பல் தங்கியிருக்கிறார்.

சிங்கம்

அப்போதுதான் இந்த கொடிய தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சுற்றுச்சூழல் அமைச்சக செய்தித் தொடர்பாளர் நெடிஷிபாண்டா ஹமுனியேலாவின் அறிக்கையின்படி, கழிப்பறையைப் பயன்படுத்த கெப்பல் தனது அறையில் இருந்து வெளியே வந்தபோது சிங்கம் அவரைப் பதுங்கியிருந்து தாக்கியதாக கூறப்பட்டுள்ளது.

நமீபிய காவல்துறை சார்பில் இந்த சம்பவம் தொடர்பான முழு அறிக்கையும் விரைவில் விசாரணை நடத்தப்பட்டு சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்த பகுதி, மலைப்பகுதிகளில் சுற்றித் திரியும் பாலைவன சிங்கங்களின் எண்ணிக்கைக்கு பரவலாக அறியப்படுவதாகவும், 2023 புள்ளிவிவரங்களின்படி, சுமார் 60 பெரிய சிங்கங்களும் அதை குட்டிகளும் இப்பகுதியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு க... மேலும் பார்க்க

ஆந்திரா: தினமும் உரியும் தோல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை குளியல்; அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்

ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நோயால் தினமும் தோல் உரிதல் ஏற்படுகிறது. பாமு பிரசாத் என்று இளைஞர் மிகுந்த சவாலான வாழ... மேலும் பார்க்க

உபி: "ஏன் பழைய மிச்சரைக் கொடுத்த?" - ஊழியருக்கு நீதிபதி அனுப்பிய சம்மன் வைரல்; பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண் நீதிபதி மதிய உணவு இடைவெளியில் கோர்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விருந்தினர் ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிரு... மேலும் பார்க்க

குஜராத்: "தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டுகிறேன்" - கார்கள் இருந்தும் சைக்கிளை விரும்பும் தொழிலதிபர்

குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறார்.குஜராத் மாநிலம் சூரத்தில் டெக்ஸ்டைல் மில்கள் வைத்திருப்பவர் சுரேஷ் ஜரிவாலா(70). இவர் தனது இளம் வயதில் சைக்... மேலும் பார்க்க

Big Ticket: லாட்டரியில் 11 லட்சம் வென்ற இந்தியர்; பல முறை அழைத்தும் NO Reply; பரிசு கிடைத்ததா?

லாட்டரி டிக்கெட்டில் ரூ.11 லட்சம் வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவருக்கு ஏற்பாட்டாளர்கள் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர்.ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி பணம் அவருக... மேலும் பார்க்க