செய்திகள் :

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

post image

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே துறை.

 கடந்த சில நாள்களாகவே, தட்கல் டிக்கெட்டையொட்டி, ஏஜென்டுகளின் கையில் தான் தட்கல் டிக்கெட் புக்கிங் உள்ளது… மக்களால் எளிதாக தட்கல் டிக்கெட் எடுக்க முடிவதில்லை என்று ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தட்கல் டிக்கெட் எடுப்பதில் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது ரயில்வே துறை.

என்ன?

இனி, ஆதார் தட்கல் டிக்கெட்டோடு இணைக்கப்பட உள்ளது. அதாவது ஆதாரை IRCTC இணையதளத்தோடு இணைக்க வேண்டும். இதன் மூலம், தட்கல் டிக்கெட் புக் செய்ய கொடுக்கப்படும் நேரத்தில் முதல் 10 நிமிடங்கள் ஆதாரை தனது ஐ.ஆர்.சி.டி.சி கணக்கோடு இணைத்தவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும்.

 ஐ.ஆர்.சி.டி.சியில் பதிவு செய்திருக்கும் ஏஜெண்டுகளுக்கு கூட, அந்த சமயத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது.

முன்பதிவு செய்வதற்கான IRCTC இணையதளம்

எப்போது?

இந்த மாத இறுதியில் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இதுகுறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, பாரதிய ரயில்வே விரைவில் இ-ஆதார் அங்கீகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கும். இது உண்மையான பயனர்கள் தேவைப்படும்போது டிக்கெட்டுகளைப் பெற உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

உப்பை உண்டு, புனித நூல்கள் மீது சத்திய பிரமாணம்! - எல்லைகளைப் பாதுகாக்க கிளம்பும் 500 அக்னி வீரர்கள்

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி முகாம்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் ... மேலும் பார்க்க

Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திறப்பு -| Top Facts

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். எதற்காக? ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் 'செனாப் பாலம்'... மேலும் பார்க்க

ஜூன் 6 பொது விடுமுறையா? பரவும் பொய் தகவல்கள்; உண்மையில் பக்ரீத் விடுமுறை எப்போது?

வெள்ளிக் கிழமை, ஜூன் 6 அரசு விடுமுறையா? இணையத்தில் பலர் நாளை விடுமுறை என்றும், நாடுமுழுவதும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் கூட மூடப்படும் என்றும் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுகளால் பலரும் ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ’சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய’த்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டங்களை ஞாயிறுக்கு தள்ளி வையுங்கள்" - எச்சரித்த காவல்துறை; அணி நிர்வாகம் சொன்ன காரணம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பை வென்றதை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட விரும்பிய முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னசாமி மைதானத்துக்கு வெளியி... மேலும் பார்க்க

`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தின... மேலும் பார்க்க