செய்திகள் :

`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?

post image

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுப்பது வழக்கம். கடைசியாக, 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்டது. அடுத்ததாக கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டிய 2021-ம் ஆண்டு கொரோனா பேரிடர் காலத்தினால் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் போனாது.

 இதனால், மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2027 இப்போது எடுக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

 இந்திய மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சாதிவாரி கணக்கெடுப்பும் மக்கள்தொகை கணக்கெடுப்போடு எடுக்கப்பட உள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு
மக்கள்தொகை கணக்கெடுப்பு

எப்போது தொடங்கப்படுகிறது?

மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின் படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2027 இரு கட்டங்களாக நடக்கப்பட உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வரும் 16-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தரவுகள் எப்படி எடுக்கப்படும்?

பெரும்பாலான இந்திய மாநிலங்களுக்கு 2027-ம் ஆண்டு மார்ச் மாதம் 1-ம் தேதி நடு இரவு அடிப்படை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லடாக், ஜம்மு & காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பனி சூழந்த பகுதிகளுக்கு 2026-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி அடிப்படை நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தப் பகுதிகளின் தட்ப வெட்பம் தான் முக்கிய காரணம்.

அடிப்படை நாள் என்றால் என்ன?

பெரும்பாலான இந்திய மாநிலங்களுக்கு, மார்ச் 1, 2027 அடிப்படை நாள் மார்ச் 1-ம் தேதி என்றால், அந்த நாளின் நடு இரவுக்கு பிறகு, பிறக்கும் குழந்தைகள் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்படமாட்டார்கள்.

 பிப்ரவரி 28, 2027-ம் ஆண்டு அன்று இறப்பவர்களின் பெயர் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சேர்க்கப்பட மாட்டாது.

மார்ச் 1-ம் தேதிக்கு பிறகு, வீடு மாறினால், அவர்கள் முன்னர் குடியிருந்த வீட்டு முகவரி தான் அவருடைய வீட்டு முகவரியாக பதிவாகும்.

மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்படி நடத்தப்படும்?

மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம், 1948-ன் படியும், மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிமுறைகள், 1990-ன் படியும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்.

கடந்த 2011-ம் ஆண்டும், இரு கட்டங்களாகத் தான் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. முதல் கட்டமாக, வீடுகள் கணக்கெடுக்கப்பட்டன, அடுத்தக் கட்டமாக, மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. அதே நடைமுறை தான் இப்போதும் பின்பற்றப்பட உள்ளது.

உப்பை உண்டு, புனித நூல்கள் மீது சத்திய பிரமாணம்! - எல்லைகளைப் பாதுகாக்க கிளம்பும் 500 அக்னி வீரர்கள்

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி முகாம்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் ... மேலும் பார்க்க

Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திறப்பு -| Top Facts

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். எதற்காக? ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் 'செனாப் பாலம்'... மேலும் பார்க்க

ஜூன் 6 பொது விடுமுறையா? பரவும் பொய் தகவல்கள்; உண்மையில் பக்ரீத் விடுமுறை எப்போது?

வெள்ளிக் கிழமை, ஜூன் 6 அரசு விடுமுறையா? இணையத்தில் பலர் நாளை விடுமுறை என்றும், நாடுமுழுவதும் அரசு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பள்ளிகள் கூட மூடப்படும் என்றும் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவுகளால் பலரும் ... மேலும் பார்க்க

குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்; கட்டுமானப் பணிகள் தீவிரம்!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ’சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய’த்தில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. அங்குதான் இந்தியாவின் செயற்கைக்கோள்கள்... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டங்களை ஞாயிறுக்கு தள்ளி வையுங்கள்" - எச்சரித்த காவல்துறை; அணி நிர்வாகம் சொன்ன காரணம்?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐபிஎல் கோப்பை வென்றதை, ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட விரும்பிய முயற்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சின்னசாமி மைதானத்துக்கு வெளியி... மேலும் பார்க்க

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே துறை.கடந்த சில நாள்களாகவே, தட்கல் டிக்கெட்டையொட்டி, ஏஜென்டுகளின் கையில் தான் தட்கல் டிக்கெட் புக்கிங் உள்ளது… மக்களால் ... மேலும் பார்க்க