செய்திகள் :

குஜராத்: "தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டுகிறேன்" - கார்கள் இருந்தும் சைக்கிளை விரும்பும் தொழிலதிபர்

post image

குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறார்.

குஜராத் மாநிலம் சூரத்தில் டெக்ஸ்டைல் மில்கள் வைத்திருப்பவர் சுரேஷ் ஜரிவாலா(70). இவர் தனது இளம் வயதில் சைக்கிளில் வேலைக்குச் சென்று வந்தார்.

இளம் வயதில் வேலைக்குச் சென்றபோது இரண்டு சைக்கிளைப் பயன்படுத்தி வந்தார். வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு ஒரு சைக்கிளையும் பின்னர் ரயிலில் பயணம் செய்து, கம்பெனி இருக்கும் இடத்தில் இறங்கி அங்கிருந்து கம்பெனிக்கு இரண்டாவது சைக்கிளையும் பயன்படுத்தி வந்தார்.

சைக்கிள்
சைக்கிள்

இது குறித்து சுரேஷ் ஜரிவாலா கூறுகையில், ''1990ம் ஆண்டு அட்லஸ் சைக்கிள் எனது வாழ்க்கையில் வந்தது. அப்போது ரூ.2000க்கு வாங்கினேன். அந்த சைக்கிளைத்தான் இப்போதும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

இந்த சைக்கிள் என்னுள் ஒன்றாக இருக்கிறது. எனவேதான் இப்போதும் அதனை எனது ஆத்ம திருப்திக்காக ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.

தினமும் காலை 40 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சைக்கிள் ஓட்டுகிறேன்''என்று குறிப்பிட்டார்.

இவர் தேநீர் குடிக்கும் முன்பு சைக்கிள் ஓட்டி முடித்துவிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளில் ஒரு முறை மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்குச் சென்று வருகிறார். அதாவது ஷீரடி சென்று வர 600 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுகிறார். தினமும் 10 ஆயிரம் படிக்கட்டுகள் நடக்கிறார். மேலும் மராத்தான் போட்டியிலும் பங்கேற்கிறார்.

சுரேஷ் ஜரிவாலாவுடன் கூடப் பிறந்தவர்கள் நான்கு பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கின்றனர்.

சுரேஷ் ஜரிவாலாவிடம் பல கார்கள், எலக்ட்ரிக் சைக்கிள்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும் காலையில் சைக்கிளை ஒரு நாளும் ஓட்டாமல் இருந்தது கிடையாது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ம.பி: மர்ம முறையில் கணவர் மரணம்; காணாமல் போன பெண்- தேனிலவுக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்தது என்ன?

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன் மற்றும் அவரது மனைவி சோனம் இருவரும் தேனிலவுக்கு மேகாலயா சென்றுள்ளனர். அங்கு இருவரும் மே 23ஆம் தேதி காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த ந... மேலும் பார்க்க

ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு க... மேலும் பார்க்க

ஆந்திரா: தினமும் உரியும் தோல், 1 மணி நேரத்துக்கு ஒரு முறை குளியல்; அரிய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்

ஆந்திராவின் அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த நோயால் தினமும் தோல் உரிதல் ஏற்படுகிறது. பாமு பிரசாத் என்று இளைஞர் மிகுந்த சவாலான வாழ... மேலும் பார்க்க

உபி: "ஏன் பழைய மிச்சரைக் கொடுத்த?" - ஊழியருக்கு நீதிபதி அனுப்பிய சம்மன் வைரல்; பின்னணி என்ன?

உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டா என்ற இடத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக இருக்கும் பெண் நீதிபதி மதிய உணவு இடைவெளியில் கோர்ட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் விருந்தினர் ஒருவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிரு... மேலும் பார்க்க

சுற்றுலா சென்ற இடத்தில் சிங்கம் கொடூரமாக தாக்கி பலியான பயணி - என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவின் நமீபியாவில் உள்ள விடுதியில் தங்கியிருந்த பெர்ன்ட் கெப்பல் என்ற தொழிலதிபரை சிங்கம் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மே 30ஆம் தேதியன்று இந்த சம்பவம் நடந்த... மேலும் பார்க்க

Big Ticket: லாட்டரியில் 11 லட்சம் வென்ற இந்தியர்; பல முறை அழைத்தும் NO Reply; பரிசு கிடைத்ததா?

லாட்டரி டிக்கெட்டில் ரூ.11 லட்சம் வெற்றி பெற்ற இந்திய வெளிநாட்டவருக்கு ஏற்பாட்டாளர்கள் பலமுறை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டனர்.ஆனால் அவர் அதற்கு எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இறுதியில் வெற்றி பணம் அவருக... மேலும் பார்க்க