செய்திகள் :

விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம்: ஆர்சிபி கேப்டன்

post image

விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

இதையும் படிக்க: ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

18 ஆண்டுகளாக கோப்பைக்கானத் தேடலில் உள்ள இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளதால், இந்தப் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கு முன்பாக, கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணி இறுதிபோட்டியில் விளையாடியுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதலும், கடைசியுமாக கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் விளையாடியது. தற்போது அந்த அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

விராட் கோலிக்காக... ஆர்சிபி கேப்டன் கூறுவதென்ன?

9 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி முன்னேறியுள்ள நிலையில், ஆர்சிபிக்காக பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் விளையாடி வரும் விராட் கோலிக்காக கோப்பையை வென்று கொடுக்க விரும்புவதாக அந்த அணியின் கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: விராட் கோலிக்காக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க விரும்புகிறோம். பல ஆண்டுகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் விளையாடி வருகிறார். இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல முயற்சி செய்வோம். எப்போதும் விஷயங்களை எளிமையாக கையாள்வது எனக்குப் பிடிக்கும். எங்கு விளையாடினாலும் அது எங்களது சொந்த திடலில் விளையாடுவது போன்ற உணர்வைத் தருகிறது. பல ஆண்டுகளாக ரசிகர்கள் ஆர்சிபிக்காக தங்களது சிறப்பான ஆதரவை அளித்து வருகிறார்கள் என்றார்.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று, எந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதிர்ஷ்ட மந்திரம்: இறுதிப் போட்டிகளில் தோற்காத ஹேசில்வுட்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜோஷ் ஹேசில்வுட் (34) விளையாடியுள்ள அனைத்து இறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ஆர்சிபி அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ஹேசி... மேலும் பார்க்க

18தான் காரணம்! ஆர்சிபிக்கு வாழ்த்து தெரிவித்த தேர்தல் ஆணையம்!

ஐபிஎல் கோப்பையை முதல்முறையாக வென்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதிப் போட்டி ... மேலும் பார்க்க

7-வது முறையாக ஃபேர் பிளே விருது வென்ற சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஃபேர் பிளே (Fair Play) விருது வென்றுள்ளது.ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!

பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலக் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதி... மேலும் பார்க்க

கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று முதல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ... மேலும் பார்க்க

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒ... மேலும் பார்க்க