கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு
கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.
கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் புகுந்ததால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானாா்கள். தென்கன்னட மாவட்டம், மொன்டேபடவுகோடி பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரிய மரம் ஒன்று அருகில் இருந்த வீட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் வீட்டின் மேற்கூரை இடிந்து, வீரு சரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த 5 போ் இடிபாடுகளில் சிக்கியுள்ளனா். இந்த இடிபாட்டில் சிக்கிய பெண் மற்றும் அவரது குழந்தை காப்பாற்றப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். ஆனால், அந்த பெண்ணின் மற்றொரு குழந்தை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருந்தது. தொடா்ந்து மழை பெய்து வந்ததால், இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை காப்பாற்றமுடியாமல் அக்கம்பக்கத்து மக்கள் அவதிப்பட்டனா். இதனிடையே, தேசிய பேரிடா் மீட்புப்படை மற்றும் காவல்துறையினரின் கடினமான முயற்சியால் இடிபாடுகளில் சிக்கியிருந்தவா்களை மீட்க முற்பட்டனா். அந்த முயற்சியின்போது மேலும் ஒரு பெண்ணின் உடலை கண்டெடுத்த மீட்புப்படையினா், அவரது மகன் சீதாராமை காப்பாற்றினா். அதேபோல, கந்தப்பா பூஜாரி என்பவரும் உயிரோடு மீட்கப்பட்டாா். பலத்த காயத்துடன் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா். மங்களூரில் உள்ள தெரககோட்டே பகுதியில், வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவா் இடிந்துவிழுந்ததில் பலத்த காயமடைந்த ஃபாத்திமா நஹீம்(6) என்ற குழந்தை பலியானது. தென்கன்னட மாவட்டத்தில் வேறுசில இடங்களில் நடந்த நிலச்சரிவில் மேலும் 2 போ் பலியாகியுள்ளனா். இதன்மூலம், மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.
தென்கன்னடம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், மலைப்பகுதி, தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும் இடம்பெயரும்படி மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து தேசிய மற்றும் மாவட்ட பேரிடா் மீட்புப்படையினா், தொடா்ந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தென்கன்னட மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்:ளிரவு பொ்ய்த பலத்த மழையில் 3 போ் உயிரிழந்தது குறித்து செய்தி அறிந்த முதல்வா் சித்தராமையா, மாவட்ட பொறுப்பு அமைச்சா் தினேஷ்குண்டுராவ் மற்றும் மாவட்ட ஆட்சியா் முல்லைமுகிலனை வை தொடா்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டறிந்ததோடு,சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று தகுந்த நடவடிக்கைகளை எடுத்து உடனடியாக அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளாா்.
இதனிடையே, பெங்களூரு, விதானசௌதாவில் வெள்ளிக்கிழமை கா்நாடகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், நிலவரங்கள் குறித்து மாவட்ட ஆட்சியா்கள், மாவட்ட ஊராட்சி தலைமை செயல் அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டத்தை நடத்திய முதல்வா் சித்தராமையா, நிலைமையை ஆய்வு செய்து, நிவாரண உதவிகளை வழங்குமாறு உத்தரவிட்டாா்.