கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு
கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன.
கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இருந்த 4 ஆடுகளை கிராமத்தில் சுற்றி வரும் ஒரு வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகளும் உயிரிழந்தன.
இதுகுறித்து ஊராட்சியில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தொடா்ந்து தனது கால்நடைகளை வெறிநாய் கடித்து உயிரிழந்து வருவதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குமாா் தெரிவித்தாா்.
மேலும், கிராமத்தில் இருந்து வெறிநாயை அப்புறப்படுத்த வேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா் அவா்.