வகுப்பறை கட்டுமானத்தில் ஊழல்: சிசோடியா,ஜெயினுக்கு ஊழல் தடுப்புப் பிரிவு சம்மன்!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக முடிவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (திங்கள்கிழமை) 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39 ஆக நிலைபெற்றது. இதற்கு டாலர் பலவீனமாக இருப்பதும், ரிசர்வ் வங்கியின் முக்கிய வட்டி விகிதங்கள் மேலும் குறையும் என்ற எதிர்பார்ப்புகளாலும் இந்திய ரூபாய் இன்று கணிசமாக உயர்ந்து முடிந்தன.
இருப்பினும், நிலையற்ற பங்குச் சந்தைகள், அந்நிய நிதி ஆகியவை வெளியேறுதல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக உயர்வு தடுக்கப்பட்டது என்று அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.55 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.30 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.85.55 ஐ தொட்ட நிலையில், முடிவில் அதன் இறுதி நிலையிலிருந்து 16 காசுகள் உயர்ந்து ரூ.85.39-ஆக முடிந்தது.
வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 காசுகள் குறைந்து 85.55 ஆக முடிவடைந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!