செய்திகள் :

ஆர்சிபியின் 18 வருட காத்திருப்பா? பஞ்சாப் கிங்ஸின் எழுச்சியா? முதல் கோப்பை யாருக்கு?

post image

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய ஐபிஎல் 18-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அகமதாபாதில் நாளை (ஜூன் 3) நடைபெறும் இறுதிப்போட்டியில் இதுவரை கோப்பையை வெல்லாத அணிகளான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன.

இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்பதால், இறுதிப்போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் அறிமுகமானது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, இதுவரை நான்கு முறை (நடப்பு ஐபிஎல் தொடரையும் சேர்த்து) இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியபோதிலும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. முதல் முறையாக கோப்பையை வெல்லும் கனவோடு நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது பெங்களூரு அணி.

இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கண்டிப்பாக வெல்ல வேண்டும் என விராட் கோலியின் ரசிகர்கள் விரும்புகின்றனர். 18 ஆண்டுகளாகத் தொடரும் கோப்பைக்கானத் தேடல் என்பது அதற்கான முக்கியக் காரணமாக இருந்தாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, அண்மையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடவுள்ளார்.

ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றதால், அடுத்த 2-3 மாதங்களுக்கு விராட் கோலி கிரிக்கெட் விளையாடுவதை அவரது ரசிகர்களால் பார்க்க முடியாது. அதன் காரணமாகவே, இந்த முறை ஆர்சிபி கண்டிப்பாக கோப்பையை வெல்ல வேண்டும் என நினைக்கின்றனர். கோப்பையை வென்று விராட் கோலி மகிழ்ச்சியாக இருப்பதை பார்க்க அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.

முதல் கோப்பைக்கான தேடலில் உள்ள மற்றொரு அணியான பஞ்சாப் கிங்ஸ், கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. அதுவே, அந்த அணி முதலும் கடைசியுமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக இருந்தது. அந்த போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது கிங்ஸ் லெவன் பஞ்சாப் என அறியப்பட்ட தற்போதைய பஞ்சாப் கிங்ஸ். நடப்பு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளதன் மூலம், அந்த அணி இரண்டாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அந்த அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர், இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக மிகவும் அற்புதமாக வழிநடத்தி வருகிறார். 11 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு முதல் முறையாக கோப்பையை வென்று கொடுக்கும் முனைப்பில் ஷ்ரேயாஸ் உள்ளார்.

ஆர்சிபியின் பலம்

ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் விராட் கோலி ஆர்சிபிக்காக தொடர்ச்சியாக ரன்கள் குவித்து வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் ஆர்சிபிக்காக 614 ரன்கள் குவித்துள்ளார். விராட் கோலி மற்றும் பில் சால்ட்டின் அதிரடியான தொடக்கம் ஆர்சிபிக்கு பலம் சேர்க்கிறது.

விராட் கோலி, பில் சால்ட்டைத் தொடர்ந்து ரஜத் படிதார், ஜித்தேஷ் சர்மா, மயங்க் அகர்வால் போன்ற வீரர்கள் ஆர்சிபியின் பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்க்கின்றனர். அதிரடி ஆட்டக்காரரான ரோமாரியோ ஷெப்பர்டு பின்வரிசையில் ஆட்டத்தின் தேவைக்கேற்ப நன்றாக விளையாடுகிறார்.

பேட்டிங்கை இவர்கள் கவனித்துக்கொள்ள, ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் கலக்குகின்றனர். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரராக ஹேசில்வுட் உள்ளார்.

பஞ்சாப் கிங்ஸின் பலம்

கடந்த சீசனில் கொல்கத்தாவுக்கு கோப்பையை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ஆட்டம் நடப்பு ஐபிஎல் தொடரிலும் தொடர்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டனாக வழிநடத்தி வரும் ஷ்ரேயாஸ் ஐயர், இதுவரை 603 ரன்கள் குவித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயரின் ஃபார்ம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு வலிமை சேர்க்கிறது.

கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரைத் தொடர்ந்து, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஷ், பிரியன்ஷ் ஆர்யா மற்றும் ஷஷாங் சிங் போன்றோர் பேட்டிங்கில் கலக்குகின்றனர்.

மும்பைக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் மார்கோ யான்சென் அணியில் இல்லாதது சற்று பலவீனமாக இருந்தது. இருப்பினும், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்மதுல்லா ஓமர்ஸாய் போன்ற வீரர்கள் தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவுகின்றனர். காயத்திலிருந்து மீண்டு மும்பைக்கு எதிரான குவாலிஃபையர் 2 போட்டியில் யுஸ்வேந்திர சஹால் விளையாடிய போதிலும், அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இறுதிப்போட்டியில் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு அதிகமாக இருக்கிறது.

இறுதிப்போட்டியில் மழை குறுக்கிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இதுவரை எந்தவொரு கணிப்புகளும் செய்யப்படவில்லை. மழை பெய்து போட்டியில் தாமதம் ஏற்பட்டாலும், கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். மழை காரணமாக நாளை முழுவதும் போட்டி நடைபெற முடியாத சூழல் உருவானால், கூடுதல் நாள் என்ற தெரிவும் இருக்கிறது.

குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆர்சிபி, இறுதிப்போட்டியில் மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியை சந்திக்கவுள்ளது.

முதல் முறை கோப்பையை வெல்லவுள்ள இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த இறுதிப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. முதல் முறை கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

7-வது முறையாக ஃபேர் பிளே விருது வென்ற சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7-வது முறையாக ஃபேர் பிளே (Fair Play) விருது வென்றுள்ளது.ஐபிஎல் சீசன் 18 தொடரின் இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்கள... மேலும் பார்க்க

பெங்களூருவில் கோப்பையுடன் ஊர்வலம் செல்லும் ஆர்சிபி வீரர்கள்!

பெங்களூருவில் ஐபிஎல் கோப்பையுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் இன்று மாலை ஊர்வலக் செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் தொடர் 18-வது சீசனின் இறுதி... மேலும் பார்க்க

கோப்பையை உச்சி முகர்ந்தது ஆர்சிபி! 18 ஆண்டுகளுக்குப் பின்..!

பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று முதல் கோப்பையை வென்றது ஆர்சிபி அணி.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ... மேலும் பார்க்க

10 பந்துகளில் 24 ரன்கள்: ஆட்டத்தை மாற்றிய ஜிதேஷ் சர்மா!

நடப்பு ஐபிஎல்லின் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 191 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 9 பந்துகளில் 2 பவுண்டரி, ஒ... மேலும் பார்க்க

191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆர்சிபி! கோப்பையை வெல்லுமா பஞ்சாப்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றுவரும் நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை!

ஐபிஎல் நிறைவு விழாவில் இந்திய ஆயுதப்படைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக விமானப் படைகளில் போர் விமான அணிவகுப்பும் நடைபெற்றது.நடப்பு ஐபிஎல் தொடரின் அகமதாபாதில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர... மேலும் பார்க்க