செய்திகள் :

இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை! 12 ஆண்டுகளுக்குப் பின்..!

post image

மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளதை ஐசிசி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட 8 நாடுகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.

இந்தத் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெங்களூரு, குவாஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் பாகிஸ்தானுக்கான போட்டிகள் இலங்கை தலைநகரான கொழும்புவிலும் நடைபெறவுள்ளன.

சாம்பியன்ஸ் டிராபியின் போது ஏற்பட்ட பிரச்சினை மற்றும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் ஒப்பந்தம் காரணமாக இரு நாடுகளுக்கும் பொதுவான மைதானமாக கொழும்பு மைதானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை நடைபெறுகிறது. பெங்களூருவில் கோலாகலமாகத் தொடங்கும் தொடருக்கான முதல் போட்டியில் இந்திய மகளிரணி விளையாடுகிறது.

அக்டோபர் 29 ஆம் தேதி நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டி குவாஹாத்தி அல்லது கொழும்புவில் நடைபெறுகிறது. அதேபோன்று, நவம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானம் அல்லது கொழும்புவில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி முதல் கோப்பைக்கான தேடலில் களமிறங்கியுள்ளது. அதேவேளையில், ஆஸ்திரேலிய இதுவரை 7 கோப்பைகளை வென்றுள்ளது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!

ஈ சாலா கப் நமது..! ஆர்சிபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஐபிஎல்லில் கோப்பையை வென்ற ஆர்சிபி மற்றும் விராட் கோலிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்று... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பு!

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலிய அணி கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ... மேலும் பார்க்க

1,60,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன! ஆஷஸ் தொடக்க நாள் விற்பனை அமோகம்!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் தொடக்க நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனையில் புதிய சாதனை நிகழ்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து கிரிக... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள்: இங்கிலாந்து பந்துவீச்சு; தொடரை முழுமையாக கைப்பற்றுமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் ட... மேலும் பார்க்க

கிரிக்கெட் திடலுக்கு சைக்கிளில் வந்த இங்கிலாந்து வீரர்கள்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வீரர்கள் சைக்கிளில் வந்த விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய... மேலும் பார்க்க

போக்குவரத்து பாதிப்பால் தாமதமாகும் இங்கிலாந்து - மே.இ.தீ. போட்டி!

போக்குவரத்து பாதிப்பால் இங்கிலாந்து - மே.இ.தீ. அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி தாமதமாகியுள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மே.இ.தீ. அணி 3 ஒருநாள், 3டி20 போட்டிகளில் விளையாடுகிறத... மேலும் பார்க்க