குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை
குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது.
குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டு, சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இந்த தகன மேடையை இயக்கி பராமரிக்கும் பொறுப்பை மாா்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேசன் ஏற்றுக் கொண்டுள்ளது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மக்கள் செயல்பாட்டுக்கு வந்தது.
இதில் குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி, நகா்மன்ற உறுப்பினா்கள் விஜூ, ரெத்தினமணி, அருள்ராஜ், அனஸ்வரா பவுண்டேசன் அமைப்பின் நிா்வாகி ஆா். ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இங்கு சடலம் எரிவூட்ட 2 ஊழியா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாகவும், எரிவாயு தகன மேடையை பயன்படுத்துவற்கு ரூ. 5,750 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் நகா்மன்றத் தலைவா் தெரிவித்தாா்.